முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் உடல்நிலை குறித்து மீண்டும் விசாரித்தார் தா.பாண்டியன்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  தா.பாண்டியன் மீண்டும் விசாரித்தறிந்தார்.

இன்னும் ஒரிரு நாட்களில் முதல்வரே ஊடகங்களுக்கு செய்திகளை வழங்குவார் என்று அப்பல்லோ சென்று முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரித்த தா.பாண்டியன் தெரிவித்தார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் நேற்று 2-வது முறையாக வந்தார். பாராளுமன்றத்துணை சபாநாயகர் தம்பிதுரை, நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். இதன் பின்னர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் மேலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் செய்திகளை ஊடகங்களுக்கு அவரே வழங்குவார். அமைச்சர்களிடம் முன்பு பார்த்த முகமலர்ச்சியை விட, இப்போது நல்ல முகமலர்ச்சியுடன், இருப்பதையும், அவர்கள் கூறுவதையும் வைத்து பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தா.பாண்டியனுடன் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆறுமுகம், சுந்தரம் மற்றும் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஏழுமலை ஆகியோர் உடன் வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்