முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டை அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      திருநெல்வேலி
Image Unavailable

தென்காசி,

செங்கோட்டை அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கண்டுப்புளிமெட்டு பனிமுண்டம் பகுதியில்  குற்றாலம் வனச்சரகர் செந்தில்குமார், செங்கோட்டை வனத்துறை அலுவலர் தர்தாஜிஸ் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சிலர் அத்து மீறி நுழைந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வனப்பகுதிக்குள் இருந்த 3 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்;டவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி, டார்ச்லைட்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்டவர்கள் செங்கோட்டை வல்லத்தைச் சேர்ந்த ராஜா, சுப்பிரமணியன், காலாங்கரையைச் சேர்ந்த கோமு என தெரியவந்தது. இவர்கள் மான், மிளா, காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட வந்தது தெரிய வந்தது. இவர்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி எங்கு தயாரிக்கப்பட்டது. அது யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்ற விபரத்தினை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிச் சென்ற 3 பேரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்