எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கச்சத்தீவை மீட்க உச்சநிதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஆனால், தி.மு.க. என்ன செய்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் காட்டமாக கேட்டார். மேலும், கச்சத்தீவு பிரச்சனையில் துரோகம் செய்தது யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் அமைச்சர் ஆவேசமாக தெரிவித்தார்.
கவனஈர்ப்பு தீர்மானம்
இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது குறித்தும் நேற்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
தி.மு.க.வினர் எதிர்ப்பு
சமீபத்தில் நடந்த கொடூரமான தாக்குதலில் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். மீனவர்கள் மீது தொடர்ந்து இதுபோன்று தாக்குதல் நடத்தப்படுவது பற்றி எல்லாம் ஸ்டாலின் கூறினார். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் என்று ஜெயக்குமார் குறிப்பிட்டபோது ஸ்டாலின் உட்பட தி.மு.க.வினர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1974-ம் ஆண்டு என்றுதானே நான் சொன்னேன். அதற்கு ஏன் இப்படி எழுந்து நின்று கூச்சல் எழுப்புகிறீர்கள். நான் யாரைப் பற்றியும் எந்த கட்சி பற்றியும் குறிப்பிடவே இல்லையே? 1974 என்றதும் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டார்.
அப்போது சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு அமைச்சர் யாருடைய பெயரையும், எந்த ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனவே அனைவரும் அமைதியாக உட்காருங்கள் என்று கூறினார். அப்போது ஸ்டாலின் எழுந்து நான் இந்த பிரச்னையில் அரசியல் எதையும் கலக்கவில்லை. மீனவர் தாக்கப்படுவது குறித்துதான் பேசினேன். ஆனால் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்று கூறுகிறார். அப்போது தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது என்றும் கூறினார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு உங்கள் கட்சி பெயரை அமைச்சர் கூறவில்லை. அப்படி அவர் சொல்லி இருந்தால் நீங்கள் விளக்கமளிக்கலாம். அவர் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்றுதானே சொன்னார். உங்கள் கட்சி பெயரை அமைச்சர் சொல்லவில்லையே என்று கூறினார்.
தி.மு.க.வினர் மீண்டும் கூச்சல்
மீண்டும் தி.மு.க.வினர் எழுந்து கூச்சல் எழுப்பினார்கள். இதற்கிடையில் அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து பேசினார். நான் வரலாற்று குறிப்புகளைத்தான் சொன்னேன். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. உங்கள் கட்சி தலைவர் பற்றியும் சொல்லவில்லை. இதற்கு நீங்கள் கோபப்படத் தேவை இல்லையே. 1974-ம் ஆண்டு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று ஜெயக்குமார் கேட்டார். மீண்டும் ஸ்டாலின் எழுந்து பேசினார்.
1974-ம் ஆண்டு கச்சத்தீவு பிரச்சினை எழுந்தபோது கருணாநிதி அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. அதனை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது என்று கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி கச்சத்தீவு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியது என்று ஸ்டாலின் கூறினார்.
துரோகம் செய்தது யார்?
உடனே அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து கச்சத்தீவை மீட்க அம்மா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்தார். ஜெயலலிதா உறுதியுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். 1998-ம் ஆண்டு கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீங்கள் 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபின் இதுபோன்று வழக்கு தொடர்ந்தீர்களா என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கேட்டார். கச்சத்தீவு பற்றி அம்மா பலமுறை இந்த மன்றத்தில் பதில் சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு பிரச்சினையில் யார் துரோகம் செய்தது என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் என்று ஜெயக்குமார் கூறினார்.
கடந்த 17-ம் தேதி அன்று டெல்லி சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை நானும், அமைச்சர்களும் சந்தித்து தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டது பற்றியும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பேசினோம் என்று ஜெயக்குமார் கூறினார். மத்திய அமைச்சரிடம் 4 கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
மீனவர்களை சுடக்கூடாது
நமது எல்லைக்குள் தமிழக மீனவர்கள் அமைதியாக மீன்பிடிக்கும்போது காற்றின் வேகம் காரணமாகவும், திசை மாறுவதாலும் கற்பனை எல்லைக்கோட்டை தாண்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலை ஏற்பட்டால் மீனவர்களை தாக்கக்கூடாது, சுடக்கூடாது, வலைகளை அறுக்கக்கூடாது. அப்படியே மீனவர்கள் பிடிபட்டாலும் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
முதலாவதாக, பாக். ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் அமைதியான முறையில் மீன்பிடிக்க மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். 2-வதாக தமிழக மீனவர்களை சிறை பிடிக்கக்கூடாது, துன்புறுத்தக்கூடாது, சுடக்கூடாது என்று கோரிக்கை வைத்தோம். 3-வதாக ஏற்கனவே பிடிபட்ட 128 விசைப்படகுகளையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று கோரினோம்.
பாக். ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க விசேஷ தொகுப்பாக 1,664 கோடி ரூபாய் நிதி வேண்டும் என்று பிரதமரிடம் ஏற்கனவே அம்மா வலியுறுத்தி இருந்தார். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி ரூபாய் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சுடப்படுவது நிச்சயம் தடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.