முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      திருப்பூர்
Image Unavailable

-------------------------------

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும்  நாள்  கூட்டம்  மாவட்ட  கலெக்டர் திருமதி ச.ஜெயந்தி,   தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,  பொது மக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும்  முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழங்கப்பட்ட   290  மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட  கலெக்டர்   அதன் மீது உரிய நடவடிக்கையினை,  உடனடியாக  மேற்கொள்ள  தொடர்புடையத் துறை  அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்கள்.

மேலும், இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விபத்தால் காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 1 நபருக்கு மாநில நோயாலிக்கான உதவித்தொகையாக ரூ.25,000/- க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துனை கலெக்டர் சுகவனம், தனித்துணை கலெக்டர்கள்  உள்ளிட்ட அனைத்து  அரசுத்துறைகளின் அலுவலர்கள்  பலர்  கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்