எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலெக்டர் டி.பி.ராஜேஷ் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடலூர் மற்றும் பண்ருட்டி பகுதி சார்ந்த பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்
பள்ளி வாகனங்கள்
கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பண்ருட்டி பகுதி அலுவலகம் சார்ந்த பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்.கலெக்டர் அவர்களின் அறிவுரையின்படி கடலூர் மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 179 பள்ளிகளைச் சார்ந்த 721 பள்ளி வாகனங்கள் நேரடியாக ஆய்வு செய்யப்படுகிறது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 75 பள்ளிகளைச் சார்ந்த 253 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.கலெக்டர் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
மூன்று இடங்களில்
கடலூர் மாவட்டத்தில் இன்று கடலூர் மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 179 பள்ளிகளைச் சார்ந்த 721 பள்ளி வாகனங்கள் நேரடி ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வு மூன்று இடங்களில் நடைபெறுகிறது.கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பண்ருட்டி பகுதி அலுவலகம் சார்ந்த பள்ளி வாகனங்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திலும், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் நெய்வேலி பகுதி அலுவலகம் சார்ந்த பள்ளி வாகனங்கள் சிதம்பரம் செம்போர்டு பள்ளி மைதானத்திலும் மற்றும் விருத்தாச்சலம் பகுதி அலுவலகம் சார்ந்த பள்ளி வாகனங்கள் விருத்தாச்சலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது
நீதிமன்ற உத்தரவின்படி
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்களுடன் ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வானது உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் பள்ளி வாகன சிறப்பு விதிகள் 2012ன் படியும் நடைபெறுகிறது. இந்த ஆய்வில் ஓட்டுநர்களுக்கு 5 வருடம் நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளதா, வாகனத்தின் ஜன்னல்களில் கிரில் பொருத்தப்பட்டுள்ளதா, முதலுதவி பெட்டி உள்ளதா, தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தின் தற்போதை நிலை எப்படி உள்ளது, வாகனத்தில் அவசர கால வழி உள்ளதா, அவை சாரியானபடி இயங்குகின்றதா என்பதை ஒவ்வொரு வாகனத்திலும் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவார்கள்.
அனுமதி
இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரிசெய்ய ஒரு வார காலம் அனுமதி வழங்கப்பட்டு, வாகன உரிமையாளர்கள் அதை சரிசெய்து வந்த பின்னரே சான்றிதழ் வழங்கி வாகனம் இயங்க அனுமதிக்கப்படும். நமது மாவட்டத்தில் பள்ளி வாகனத்தின் ஓட்டுநர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டாமலும், குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு கொண்டு செல்லவும், வீட்டில் இறக்கி விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உரிமம் ரத்து
பள்ளி வாகனங்கள் மற்ற வாகனங்களுடன் போட்டிப்போட்டுக்கொண்டு ஓட்டுவதாகவும், வேகமாக செல்வதாகவும் புகார் வந்தால் அந்த பள்ளி வாகனத்தின் உரிமத்தினை ரத்து செய்யவும், அதோடு மட்டுமில்லாமல் அந்த வாகனத்தின் ஓட்டுநரின் உரிமத்தையும் ரத்து செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆகவே, பள்ளி வாகன ஓட்டுநர்கள் குழந்தைகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவேண்டும். மேலும், இந்த வருடாந்திர ஆய்வு மட்டுமின்றி 3 மாதத்திற்கு ஒரு முறை திடீர் ஆய்வும் பள்ளி வாகனங்கள் மீது மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
பலர் பங்கேற்பு
இந்த ஆய்வின்போது சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் நரசிம்மன், வட்டார போக்குவரத்து அலுவலர் மணி, கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.சுந்தரராஜ், பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கே.பிச்சையப்பன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்3 days 6 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.