முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரன் முட்டுக்கட்டையை முறியடிப்போம் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன்  அளித்துவரும் முட்டுக்கட்டையை முறியடிப்போம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் இன்று நடை பெறும் விசாரணையில் பங்கேற்பதற்காக அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே விசாரணை நடந்தபோது எங்கள் தரப்பில் வாதங்களை முழுமையாக எடுத்து வைத்தோம். இப்போது மறு விசாரணை இன்று  மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அனைத்து ஆவணங்களையும் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளோம். கூடுதல் ஆவணங்களையும் சட்டப்படி தாக்கல் செய்துள்ளோம். எதிர்தரப்பினர் (டி.டி.வி. தினகரன்) எப்படியாவது இந்த விசாரணையை காலதாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், விசாரணை நடக்க கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அதை அனைத்தையும் முறியடித்து எங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்து கூறுவோம். முதல்-அமைச்சர், துணை முதல்வர் தலைமையில் அ.தி.மு.க. செயல்படுவதை நிரூபித்து இரட்டை இலையை கண்டிப்பாக பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

துணை சபாநாயகர் தம்பித்துரை

சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க. தொண்டர்கள் அம்மாவின் வழி வந்தவர்கள் இந்த அரசையும், கட்சியையும் காப்பாற்றுவதுதான் கடமை என்று செயல்படுகிறார்கள். இப்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது . அவர் எதற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினாரோ அதன்படி செயல்பட்டு இந்த இயக்கத்தை காப்பது எங்கள் கடமையாகும். இதைத்தான் பொதுமக்களும், கழகத்தினரும் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து