எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்திற்கான மானிய ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். மேலும், தினகரன் மற்றும் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் புதுக்கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்புமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிவாரண உதவி
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்.ஜிஆரின் உருவச்சிலை அக்கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது, எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி இருவரும் இனிப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினர்.
பிரதமருக்கு அழைப்பு
இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும். இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் தேதி கொடுத்ததும் விழா நடைபெறும். இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களைமீட்க நடவடிக்கை எடுக்கும் படி பிரதமருக்கும் வலியுறுத்தியுள்ளோம்.
மறுபரிசீலனை...
ஹஜ்பயணத்தின் மானியம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தோம். இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் தங்களின் பாதுகாப்பை முன்னிட்டு, தமிழக அரசிடம் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு செய்யாத நிலையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இருப்பினும் வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அ.தி.மு.க. தயார்...
ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ., தினகரன் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவரிடம்தான் கேட்கவேண்டும். மேலும் அவர் புதுக்கட்சி தொடங்குவதால் அ.தி.மு.கவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 10 ஆண்டுகள் அவர் கட்சியிலே இல்லை. அவர் எங்கு போனார் என்று கூட தெரியாது. அப்போது கட்சி ஏதாவது பாதிப்பை சந்தித்ததா? ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மட்டுமே அவரை பெரிது படுத்துகின்றீர்களே தவிர, மக்கள் யாரும் அவரை நினைக்கவே இல்லை.
உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க எப்போதும் தயாராக உள்ளது. மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளது உட்கட்சி பிரச்சனை, குடும்ப பிரச்சனையை யாராவது வெளியே சொல்வார்களா? அதை பற்றி பொதுவெளியில் விவாதிக்கவிரும்பவில்லை. மதுசூதனனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. அவரும் திருப்தியடைந்து விட்டார்.
பிரதமரை சந்திப்பேன்...
இந்தியாவின் நிதி அறிக்கை தாக்கல் செய்வதக்கு முன்னாள் மத்திய அமைச்சரால் கூட்டம் கூட்டப்படும். அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் (ஓ.பன்னீர்செல்வம்) புதுடெல்லி செல்கிறேன். தேவைப்பட்டால் பிரதமரை சந்திப்பேன். பிரதமரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் காவிரி பிரச்னை குறித்து கோரிக்கை வைப்பேன். காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும், காவிரிநீர் பங்கீடு குறித்தும் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. பாசனத்திற்கு தண்ணீர் தேவை என மத்திய அரசிற்கும், பிரதமருக்கும், கர்நாடக முதல்வருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் ஒரு பயனும் இல்லை.
பங்கிட்டு தர...
நீதிமன்றத்தில் இடைக்கால வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றத்தில் தீர்ப்புவரஇருக்கிற காரணத்தினாலே இந்த மனுவை ஏற்கமுடியாது என்று நிராகரித்துவிட்டார்கள். இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்கான பதில் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக அரசை பொருத்தவரையில் இருக்கிற தண்ணீரை சமமாக பங்கிட்டு விவசாயிகளுக்கு தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியில் உள்ள நிர்வாகிகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வரும்.
பாதிப்பு இல்லை...
நடிகர் கமல்ஹாசன் தனிக் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட பிறகு அதுபற்றி கருத்து சொல்கிறேன். தனிக்கட்சியானாலும், கூட்டாக கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.கவுக்கு யாராலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. பட்டாசு தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நீதிமன்றத்திலும் இது குறித்துவழக்கு தொடரப்பட்டு மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நேற்று காலை 11 மணி முதல் 12 மணிவரை சுமார் ஒரு மணிநேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சென்னையில் சிறப்பாக நடத்துவது குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவையொட்டி வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி என்னென்ன நலத்திட்ட உதவிகள் மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை துணைசபாநாயகருமான தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, ஜெயகுமார். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வீரமணி, சரோஜா, சீ.வளர்மதி, ராஜலட்சுமி, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன், கடம்பூர் ராஜூ, மணிகண்டன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, துரைக்கண்ணு, ராமகிருஷ்ணரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், பாடநூல் வாரியத்தலைவர் பா.வளர்மதி, எம்.ஜிஆர். இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர், மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், வழக்கறிஞர் அணி செயலாளர் நவநீதக்கிருஷ்ணன் எம்.பி., மாவட்ட செயலாளர்கள், வி.என்.ரவி, பாலகங்கா, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், முன்னாள் பேரவை மாவட்ட செயலாளர் ஆர்,எம்,.டி.ரவீந்திரஜெயன், முன்னாள் கவுன்சிலர் டி.சிவராஜ், ஆயிரம்விளக்கு ஜெயலலிதா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
உதகையில் 126-வது மலர் கண்காட்சி: மே 10-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது
28 Apr 2024ஊட்டி, உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே மாதம் 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்: வரும் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை
28 Apr 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்தோடு கொடைக்கானல் செல்கிறார்.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
28 Apr 2024பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழகத்தில் கோடைமழை குறைவாக பொழியும்: இந்திய வானிலை மையம் தகவல்
28 Apr 2024புதுடில்லி, இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை மழை குறைவாகவே பொழியும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
சஞ்சு சாம்சன் - துரூவ் அபாரம்: லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்
28 Apr 2024லக்னோ, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 7விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
சி.எஸ்.கே - பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது
28 Apr 2024சென்னை, சி.எஸ்.கே. - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்.29-ல்) தொடங்க உள்ளது.