எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடிபழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் ப.தனபால் நேற்று திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அலங்கரிப்பு...
தமிழக முதல்வராக ஜெயலலிதா 6 முறை பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். அவருடைய படத்தை தமிழக சட்டசபை அரங்கில் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜெயலலிதா படத்தை சட்டமன்ற அரங்கில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி தமிழக சட்டசபை நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத் திறப்பையொட்டி சட்டமன்ற வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வரவேற்ப்பு...
இந்த விழாவிற்கு சபாநாயகர், தனபால், மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஒன்றாக சபை்க்கு வந்தனர். அவர்களை அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அனைவரையும் வரவேற்று பேசினார். சட்டசபையில் அரங்கில் 11 வது திருவுருவப் படமாகமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு வண்ண உருவப்படத்தை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ப.தனபால் திறந்து வைத்தார்.
சபாநாயகர் பேச்சு...
அவரது உருவப்பட்டத்தை திறந்ததும் ஜெயலலிதாவை வரவேற்று தங்கத்தாரகையே வருக வருக என்ற பாடல் ஒலித்தது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அனைவரும் ஜெயலலிதா புகழ் வாழ்க என்று முழக்கமிட்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். முடிவில் சபாநாயகர் தனபால் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
பேரவைத் தலைவர் பொறுப்பில் நடுநிலை தவறாது பணியாற்றியுள்ளேன் என மறைந்த முதலவர் ஜெயலலிதா அளித்துள்ள அந்தப் பாராட்டு ஒன்றையே என் பேறாக, கிடைத்தற்கரிய வரமாக, என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பரிசாகக் கருதி வாழ்ந்தேன். பேரவைத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டபோது, யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து மகிழ்ந்தேன்.
அசாதாரணமானவை...
அவரின் இரங்கல் தீர்மானத்தின்மீது பேசும் வாய்ப்பு கிடைத்தபோது, யாருக்கும் கிடைக்கக்கூடாத வாய்ப்பைப் பெற்றமைக்காக வருந்தினேன். இன்றைக்கு தாமரை இலை தண்ணீர்போல மறைந்த முதல்வரின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகின்றேன். எனக்கென்று யாரும் கிடையாது. எனக்கு உறவுகள் இல்லை. எல்லாமும் நீங்கள்தான்" என்னும் சங்கல்பத்தோடு, நெருப்பை கிரீடமாய் நித்தம் நித்தம் சுமந்து, வெளிச்சத்தை வாழ்விக்க எண்ணெயாய், திரியாய் எரிந்த தீபம் மறைந்த முதல்வர். ஏழையெளிய மக்களுடைய வறுமையைப் போக்குவதற்கு அவர் தீட்டிய திட்டங்கள் யாவும் அசாதாரணமானவை.
கடவுளாகத் தெரியும்...
சந்தனமாய்க் கரைந்து, சங்கத் தமிழ் பூமிக்கு சாதனைகளைக் குவித்து மறைந்துள்ளார். முதல்வர் மறைந்தாலும், கரிகாலன் கல்லணைக்கு காவிரி ஓடி வந்து கைகுலுக்கும் போதெல்லாம், கம்பீரத் தாயின் முகம் கழனியெங்கும் பயிரோடும், காவிரி நீரோடும் கலந்தே சிரிக்கும். முல்லைப் பெரியாற்று அணை நிரம்பி, முழு அளவு தொடும்போது மூவேந்தர் ஓர் உருவாம் முத்தமிழ்த் தாயின் முகம் தென் மாவட்டம் எங்கும் தேனாக இனிக்கும். கள்ளிப்பால் கொடுமை கண்முன்னே நிழலாடும் போதெல்லாம் அதற்குக் கொள்ளிவைத்த கருணைத் தாயின் முகம் கடவுளாகத் தெரியும். மடிக்கணினி, மிதிவண்டி, மாணவர்க்கு சீருடை, காலணி, கல்வி உதவித் தொகை என கனிவோடு தந்த தாயை, ஈரிலையில் வாழுகின்ற இன்னொரு கலைமகளென்று இவ்வுலகம் போற்றும். யாராலும் மறக்க முடியாத தெய்வம், இன்று படமாய் மாறி, என்றென்றும் வழிகாட்டும் பாடமாய் நிற்கும் தெய்வம் .அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்போது, முதலமைச்சராக இருந்தாலும், ஓர் உறுப்பினர் என்ற முறையில், தான் ஆற்ற வேண்டிய கடமையை மிகச் சரியாக அவர்கள் ஆற்றினார்.
வழிநடத்திச் செல்பவர்...
அவர் இந்த அவையில் நடந்து கொண்டது, நமக்கெல்லாம் பாடம். சிறந்த முதலமைச்சரை, மிக உயர்ந்த செயல்பாடுடைய உறுப்பினரைப் பெற்றமைக்காக இந்தப் பேரவை நிச்சயமாகப் பெருமை கொள்கிறது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. அவரின் புகழ் என்றென்றும், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்டம் மட்டுமல்ல, உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்கிற நம்பிக்கையை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். நமக்கே தெரியாமல் உதவும் இதயத் துடிப்புகளாய் ஒவ்வொரு கணமும் நம்மைக் காத்து, உயிர்ப்பாக வைத்திருப்பவர். நம்மை வழிநடத்திச் செல்பவர். இவ்வாறு பேசினார்.
தினகரன் ஆப்செண்ட்
இந்த விழாவில் ஆர்.கே.நகர் சுயேட்சை எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் பங்கேற்பதாக அறிவித்திருந்தார். அவர் சட்டசபைக்கு வரவில்லை. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, தோழமைக்கட்சி எம்.எல்.ஏ.க்களான நடிகர் கருணாஸ், தனியரசு ஆகியோரும் வந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினர்கள்...
ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு விழாவை திமுக- காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன. எனவே அந்த வரிசையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், வைத்திலிங்கம், செம்மலை, சி.பொன்னையன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அதிமுக எம்.பிக்கள் நவநீத கிருஷ்ணன், அன்வர் ராஜா, எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக அமர வைக்கப்பட்டிருந்தனர். பார்வையாளர் மாடத்திலும் சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கை பக்கம் யாரும் போகவில்லை. எனவே அந்த இருக்கை காலியாக இருந்தது.
அதிகாரிகள் மாடத்தில் டி.ஜி.பி.ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர்,துணை முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரு்ககு பொன்னாடைகளும் நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. விழா முடிந்ததும் சட்டசபையில் திறக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துடன் அதிமுக முக்கிய பிரமுகர்கள் மைத்ரேயன் மற்றும் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.
அமைச்சர்கள் வரிசையில் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் நடிகர் கருணாஸ் அதிமுக எம்பி எஸ் ஆர். பாலசுப்ரமணியன் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா வைகை செல்வன் ஆகியோர் அமைச்சர்களுக்கு அடுத்தப்படி ஆளுங்கட்சி வரிசையில் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தனர்.
ஜெயலலிதா திருவுருவ படம்
ஜெயலலிதாவின் உருவப் படம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமரும் பகுதியில் முதல்வர் இருக்கைக்கு பின்புறம், முதல் மற்றும் இரண்டாவது பிளாக் இடையில் உள்ள தூணில் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள தலைவர்கள் திருவுருவப் படங்களை போல ஜெயலலிதா திருவுருவப் படமும் 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்டதாகவும் முழு உருவப்படமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கவின் கலைக் கல்லூரியை சேர்ந்த ஓவியர் மதியழகன் வரைந்திருந்தார். ஜெயலலிதா உருவப் படத்தின் கீழ் அவர் பொதுக்கூட்டங்களிலும் அறிக்கைகளிலும் அதிகம் பயன்படுத்தும் அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
அரங்கம் முழுவதும் ஆரவாரம்
விழாவின் போது இடையிடையே மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேச்சுக்கள் ஒலிபரப்பப்பட்டன, 23.1.2016 அன்று தமிழக அரசின் இடைநிலை நிதிநிலை அறிக்கையின் போது ஜெயலலிதா பேசிய அவரது பேச்சு ஒலி பரப்பு செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதாவின் குரல் மீண்டும் ஒலித்ததை கேட்டதும் விழா அரங்கில் இருந்த அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் ராகுல் காந்தி பேச்சு
26 Apr 2024பெங்களூரு:காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இ.வி.எம்.-ல் பதிவான வாக்குகளோடு ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி:தேர்தலின் போது இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளோடு விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து தீர்பளித்த சுப்ரீம் கோர்ட்,
-
காஷ்மீர்ல் எண்கவுன்டர்:2 பயங்கரவாதிகள் பலி
26 Apr 2024ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
-
சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில் தலைமை நீதிபதி அறிவிப்பு
26 Apr 2024புதுடெல்லி:“சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்தி
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.