முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து நாட்டில் நடந்த பஸ் விபத்தில் 17 பேர் பலி

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

தாய்லாந்து: தாய்லாந்து நாட்டில் நடந்த பேருந்து விபத்தில் 17 பேர் பலியாகினர். 33 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தாய்லாந்து அதிகாரிகள் தரப்பில், தாய்லாந்தில் வடகிழக்கு பகுதியிலுள்ள நக்ஹான் ராட்ச்ஹசஸ்மா மாகாணத்தில் இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின்மீது மோதியது. இதில் அப்பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பலியாகினர். 33 பேர் காயமடைந்தனர்” என்றனர்.

காயமடைந்தவர்களின் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மியான்மரில்தான் சாலை விபத்துகள் காரணமாக அதிகம் மரணங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் சாலை விபத்து காரணமாக 24,000 பேர் பலியாகியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து