முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹங்கேரி பிரதமராக 3வது முறையாக விக்டர் ஆர்பன் மீண்டும் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஹங்கேரி: ஹங்கேரி நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் விக்டர் ஆர்பன் (54) மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஹங்கேரியின் தேசிய தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:
ஹங்கேரி நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 68.80 சதவீத்தை எட்டியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் 61.73 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்த நிலையில், நடப்பு 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்குபதிவு 7 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

பதிவான வாக்குகளில் 93.3 சதவீதம் எண்ணப்பட்டு விட்டன. விக்டர் ஆர்பனின் பிடஸ் கட்சி பெரும்பான்மையான 48.94 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. முக்கிய போட்டியாக விளங்கிய ஜோப்பிக் கட்சிக்கு 19.78 சதவீத வாக்குகளும், சோஷலிஸ்ட் கட்சிக்கு 12.35 சதவீத வாக்குகளும், எல்எம்பி கட்சிக்கு 6.89 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிடஸ் கட்சியின் மாபெரும் வெற்றியையடுத்து ஹங்கேரியின் பிரதமராக விக்டர் ஆர்பன் மீண்டும் தேர்வாகியுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் இந்தப் பதவியை ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விக்டர் ஆர்பன் கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளோம். ஹங்கேரியையும், நம்மையும் பாதுகாப்பதற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து