முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: நடைமுறைக்கு வந்தது அவசர சட்டம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்குத் தூக்கு தண்டனை அளிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிப்பது நடைமுறைக்கு வந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ. உள்ளிட்ட 5 பேரால் மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். சூரத் நகரில் 11-வயது சிறுமி 8நாட்கள் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் 87 இடங்களில் காயங்களுடன் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இதே போன்று நாட்டின் பல்வேறு நகரங்களில் சிறுமிகள் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவது கவலையையும், பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடர் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு சில திருத்தங்களும் செய்யப்பட்டன. பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த அவசர சட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை  20ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிக்குவோருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. குற்றத்தின் தீவிரத்துக்கு ஏற்ப வாழ்நாள் சிறை, அல்லது மரண தண்டனை அளிக்க முடியும். மேலும் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஜாமீன் வழங்குவதிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தல் அல்லது கூட்டுப் பலாத்காரக் குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது. குறித்த நேரத்துக்குள் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரித்து முடிப்பதற்காகக் கூடுதலாக போலீஸார், மற்றும் நீதிமன்றம், நீதிபதிகள், வழக்கறிஞர்களை நியமித்தல் போன்ற திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த அவசரச்சட்டத்தின் வரைவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அரசு  அனுப்பியது. அதற்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்கள், குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்கு இனி தூக்கு தண்டனை விதிக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து