முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி உடல்நிலை குறித்து சந்திரபாபுநாயுடு நலம் விசாரிப்பு

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் நலம் விசாரித்தார்.

உடல் நலம் குன்றிய தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஜூலை 29-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் சீரானது. கருணாநிதிக்குச் சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றைப் போக்குவதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், உடல் நிலை சீராகவே இருந்து வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாள்தோறும் பல தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று மதியம் வந்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

சந்திரபாபு நாயுடு, கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் விசாரித்தார்.

பின்னர் தனது டுவிட்டர் பக்க பதிவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நேரில் கேட்டறிந்தேன். கருணாநிதி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர், கருணாநிதியின் உடல்நிலை தேறி வருகிறது, எப்போதும்போல் போராடி வருகிறார் என தெரிவித்தார்.

கருணாநிதி கை, கால் அசைவுக்காக இன்று பிசியோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து