எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு நாட்டின் பெருமைக்கும், சிறப்புக்கும், உயர்விற்கும் காரணம் அந்நாடு மட்டுமன்று அதில் வாழும் மக்களும், அவர்தம் நாகரிகமும், பயன்பாடும், வாழ்க்கை முறையுமே ஆகும். அந்த வகையில் தமிழ்நாடு சிறந்து விளங்கத் தமிழர்களும், அவர்கள் அமைத்த கோயில்களும், அவர்களின் சமய நம்பிக்கையும், வழிபாட்டு முறைகளுமே காரணமாகும்.
தல வரலாறு
நினைத்த காரியத்தை நிறைவேற்றி பக்தர்களுக்கு நிறைந்த அருளைத்தந்து காத்து வரும் ஊட்டி அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோயில் குறித்த வரலாறு:-
உலகிலேயே தவத்தில் சிறந்த பகுதி தமிழ்நாடாகும். தமிழ்நாட்டு மக்கள் கடவுள் பக்தியில் மிகவும் சிறந்தவர்கள். இமைப்பொழுதும் நெஞ்சிலிருந்து இறைவனை நீங்காது நினைப்பவர்கள். இறை உணர்வானது தமிழக மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. அந்த பழமொழிக்கிணங்க தமிழ்நாட்டு ஊர்களில் எல்லாவற்றிலும் ஆலயங்கள் நிறைந்துள்ளதை நாம் அறிவோம். அந்த வரிசையில் மலைகளின் அரசி எனத் திகழும் ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் மிகவும் பெருமை வாய்ந்தது. இத்திருக்கோயிலானது எல்லோரும் எளிதில் வந்து தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஊட்டி உலக சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் இங்கு வரும் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாது வெளிமாநிலத்தவர்களும், வெளிநாட்டினரும் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.
சக்திமலை
தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களைத் தன்னுள் அடக்கி அப்பகுதியைச் சீதவளநாடு என்றழைத்தனர். குளிர், காற்று, பெருமழை, கடும்பனி யாவும் நிறைந்த இப்பகுதியை சீதாநாடு என்பது பொருத்தமானதே. நாடென்ப நாடா வளந்தரும் நாடு என்ற வள்ளுவர் கருத்திற்கு இணங்க இச்சீதநாடு இயற்கை வளம் நிறையப் பெற்றுள்ள நாடாகும். சீதநாட்டுக்கு அழகு தருவனவாக இரண்டு மலைகள் உள்ளன. ஒன்று வெள்ளியங்கிரி மற்றொன்று நீலகிரியாகும். இவற்றுள் வெள்ளியங்கிரியை சிவன்மலை என்றும், நீலகிரியைச் சக்தி மலை என்றும் வடமொழி கந்தபுராணம் கூறுகின்றது.
மிகப்பழம் தமிழ் நூலாகிய சிலப்பதிகாரத்துள் நீலகிரி பற்றி குறிப்பு உள்ளது. சேரன் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களுடன் போர் புரிய வஞ்சி மாநகரத்திலிருந்து புறப்பட்டு பெரும்படையுடன் சென்றான். அப்போது அவர் நீலகிரி வழியாகச் சென்றான் என்பதனை நாம் சிலப்பதிகார வரிகள் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.
3 ஆயிரம் ஆண்டுகள்
நீலகிரி மலைக்குகைகளில் தொல்மாந்தர்களின் பழங்கால ஓவியங்கள் தொல்பொருள் துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் சுமார் 3000 ஆண்டுகள் எனப்படுகிறது. ஆகவே மூவாயிரம் ஆண்டுகளாக மாந்தரினம் நீலகிரி மலையில் வாழ்ந்து வருவது வரலாற்றால் நன்கு தெரிகிறது. நீலகிரி மலையானது காட்டுவளம், நீர்வளம், நிலவளம் மிக்கதாய்த் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறுவது போன்று கைபுனைந்தியற்றாக்களின் பெருமை வனப்பு உடையதாகத் திகழ்கிறது. நீலகிரிக்கு மணிமுடியாய்த் திகழ்வது உதகமண்டலம் (ஊட்டி) நகரமாகும். இந்நகரம் நீலகிரி மாவட்டத்தின் தலைநகரம் ஒத்தைக்கல் மந்து என்பது இதன் பழைய பெயராகும்.
மந்து என்றால் மலை என்று பொருள்படும். ஒற்றைக்கல்லில் உருவாக்கப்பட்ட மலை என்பது உதகமண்டலம் என மருவி வழங்குகிறது. ஊட்டி நகரத்தின் அமைப்பை கூர்ந்து கவனித்து பார்த்தால் ஓங்கார வடிவம் போல் அமைந்துள்ளது தோன்றும். கடந்த 1822-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் ஸ்டோன் ஹவுஸ் என்ற பகுதியைக் கண்டறிந்து அங்கு வந்து குடியேறி ஊட்டியைத் தோற்றுவித்தார். எனவே தான் இன்றும் ஸ்டோன்ஹவுஸ் பகுதிக்கு அண்மையில் உள்ள பகுதிக்கு பழைய ஊட்டி என்றழைக்கப்படுகிறது. தொடர்ந்து இங்கு நிலவிய தட்ப வெட்பநிலையை விரும்பிய வெளிநாட்டவர்களும், நம் நாட்டவர்களும் இங்கு வந்து குடியேறியதாகத் தெரிகிறது.
மாரியம்மன் பெருமை
மக்கள் தொகை பெருக பெருக ஊட்டி நகரில் வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் பெருகின. இன்றியமையாது வேண்டப்படுகிற வசதி, வாணிகம் பெருகியது. ஊட்டி நகரின் மையப் பகுதியில் சந்தைப் பகுதியை ஓட்டிய இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், காளியம்மன் திருக்கோயில். சந்தைக்கடை ஓட்டி அமைந்திருப்பதால் இக்கோயிலை சந்தைக்கடை மாரியம்மன் கோயில் என்றும் பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த மாரியம்மன் கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும்.
தாயை தெய்வமாக வணங்கும் பழக்கம் மிகப் பழையது நினைவிற்கு எட்டாதது. தாய்வழிச் சமுதாயம் சிறந்து விளங்கிய காலத்தில் தாயே குடும்பத்தின் தலைவியாக விளங்கினாள். அம்மா என்ற தமிழ்ச் சொல்லில் இருந்துதான் சுமேரியர்களுக்கு உமா என்றும், பாபிலோனியர்களுக்கு உம்மா என்றும், ஆர்க்கேடியர்கள் உம்மி போன்ற சொற்கள் தோன்றியுள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிந்துவெளி நாகரிகத்தில் பெண் தெய்வ வழிபாடு சிறந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் இவள் செல்வி என்று அழைக்கப்பட்டாள். பெண் தெய்வம் சக்தியையும், வளத்தையும் தருவதாகக் கருதப்பட்டது. பெண் தெய்வத்தை பெருமோட்டாள் என்று அழைப்பர். பெருமோட்டாள் என்றால் எல்லோரையும் பெற்ற வயிறு என்று விளக்கம் தருகிறார், நச்சினார்க்கு இனியர் என்கிற உரைகாரர்.
ஊருக்கு ஒரு பெண் தெய்வம்
ஊருக்கு ஒரு பெண் தெய்வம் அந்த ஊரையும், ஊர் மக்களையும் காக்கும் என்ற நம்பிக்கை மிகு பழங்காலத்திலிருந்தே எழுந்தது. இத்தேவதை கோயில் வடக்கு நோக்கி கட்டப்படும். ஒவ்வொரு ஊரிலும் காக்கும் தேவதையாகவும், வளத்தின் சின்னமாகவும் பெண் தெய்வக் கோயில்கள் கட்டப்பட்டன. தமிழ்நாட்டில் இவை மாரியம்மன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. உலகம் இயங்குவதற்கு முதற்காரணமே சக்திதான். வானவெளியாக, வெளியில் வீசும் காற்றாக, காற்றில் இயங்கும் உயிராக மற்றும் மண்ணாக, நெருப்பாக, நீராக ஆக எல்லாமுமாக இருந்து அருள்சுரக்கும் தன்மை அந்த ஆதிபராசக்திக்கு மட்டுமே இருக்கிறது. இதனையே பாவேந்தர் பாரதிதாசன்
எங்கெங்கு காணிணும் சக்தியடா,
ஏழு கடன் அவள் வண்ணமடா என்று பாடியுள்ளார். அந்த ஆதிபராசக்தி இத்திருக்கோயிலில் மாரியம்மனாக, காளியம்மனாக, காட்டேரி அம்மனாக என முப்பெரும் தேவியாக எழுந்தருளியிருப்பது சிந்தனையை தூண்டி விடும் ஒரு செய்தியாகும். சக்தி என்பது வலிமை என்ற பொருளைத்தரும் சொல்லாகும். அந்த சக்தி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என மூன்று வகையாக உள்ளது. இச்சை என்பது விருப்பமாகும். விருப்பங்களை அடைந்து திருப்தியாவதற்கு உரிய வகையில் வலிமை தருவது இச்சா சக்தியாகும். கிரியை என்பது வினையாகும். உயிர்கள் இந்த உலகில் முறையாக செயல்படுவதற்கு உரிய வகையில் வலிமை தந்து ஆட்கொள்பது கிரியா சக்தியாகும்.
அதேபோன்று உயிர்கள் இந்த உலகத்தில் விருப்பத்திற்கேற்றவாறு இயங்கி வாழ்ந்து ஓய்ந்த பின்னர் ஞானம் என்ற அறிவுநிலையை எய்துவதற்கு உரிய வகையில் வலிமையைத் தந்து உய்விப்பது ஞான சக்தியாகும். ஆக அம்மன் இந்த மூன்று வகையான சக்திகளையும் உயிர்கட்டு, வாரி வழங்குவதற்காகவே ஊட்டி மாரியம்மன் திருக்கோயிலில் மாரியம்மனாகவும், காளியம்மனாகவும், காட்டேரியம்மனாகவும் மூன்று வடிவங்களை தாங்கி ஆட்சி செய்கின்றாள் என்பது உண்மை.
திருக்கோயில் சன்னதிகள்
இக்கோயிலானது பக்தர்களின் வழிபாட்டுக்காக காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அடையா நெடுங்கதவாகத் திறந்தே இருக்கும் இக்கோயிலில் நான்கு கால பூஜைகள் வேதஆகம முறைப்படி நடைபெற்று வருகிறது. இப்பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு இடையூரின்றி அம்மனை வணங்கி அம்பாளின் அருளைப் பெறலாம். இத்திருக்கோயிலில் அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு காளியம்மன் இருவரும் மூலஸ்தனத்தில் ஒன்றாக இருந்து காட்சி அளிக்கின்றனர். இங்கு காட்டேரி அம்மனுக்கு தனியாக ஒரு சந்நிதியும் உள்ளது. இந்த சந்நிதியில் குழந்தை இல்லாதவர்கள், குழந்தைப் பேறு வேண்டி தொட்டில் கட்டி வழிபாடு நடத்துவர். அத்துடன் தங்கள் நோய் தீர வேண்டிக் கொள்பவர்களும் உண்டு. தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் காட்டேரி அம்மனுக்கு கோழிக்குஞ்சும், கருப்புப் புடவையும் காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.
இத்திருக்கோயிலில் பிள்ளையார், ஏகாம்பரேசுவரர், காமாட்சி அம்மன், தியாராச பெருமாள், வடிவாம்பிகை, சுப்பிரமணியர், சண்டேசுரர், சப்த கன்னிமார்கள், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, நவக்கிரகங்கள், துர்கை முதலிய சந்நிதிகளும் உள்ளன. மாரியம்மன், காளியம்மன் சன்னதிக்கு முன்னர் சிவச்சின்னமான நந்தியெம்பெருமாள் காட்சி தருகிறார். அம்பாளுக்குச் சிங்க வாகனம் தான் அமைக்க வேண்டும். ஆயினும் காளை வாகனம், பெரியோர்கள் அமைந்துள்ளமைக்கு காரணம் ஒன்று இருக்க வேண்டுமல்லவா?
இங்கு எழுந்தருளியுள்ள கருணாம்பிகையாகிய அன்னை சாந்த வடிவினளாகக் காட்சி அளிக்கின்றாள் என்பதால்தான் தரும வடிவமான நந்தியம் பெருமானை அங்கு அம்மையின் வாகனமாக அமைத்தனர் போலும். சிவபெருமானுக்குரிய ஊர்தியாகிய காளையை சக்திக்கும் ஏற்றதாய் அமைத்திருப்பது மிகவும் பொருத்தமுடையதேயாம். அம்பாளுக்கு மெய்காப்பாளர்களாக துவாலபாலகர்களும் வீற்றிருக்கிறார்கள். இந்த கோயிலில் நவக்கிரக நாயர்கள் தம்பதி சமேதராய் இருப்பது ஒரு சிறப்பாகும்.
திருவிழாக்கள்
இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாரியம்மனுக்கு 28 நாட்கள் சிறப்பு உற்சவம், தேரோட்டம் முதலியன நடைபெறுகின்றன. அந்த நாட்களில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவுருவத்தில் துர்க்கையாகவும், காமாட்சியாகவும், பார்வதியாகவும், மீனாட்சியாகவும், புவனேஸ்வரியாகவும், பகவதியாகவும் இன்னும் பற்பல திருக்கோலங்களில் அலங்காரம் பெற்று திருவீதி உலா எழுந்தருள் புரிவது கண்கொள்ளாக் காட்சியாகும். தேர்த்திருவிழாவானது ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபெறும். திருத்தேரில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அருள்மிகு மாரியம்மனுக்கு அந்நாளில் வெள்ளைச் சேலையை உடுத்தி அலங்கரிப்பர்.
ஆதிநாளில் ஊட்டியில் வாணிபம் செய்த வணிகர்களும், பொதுமக்களும் முதல் முதலில் இரண்டு பெண் தெய்வங்களை கண்டு வணங்கியதாகக் கேள்விப்படுகின்றோமே. அந்த பெண் தெய்வங்கள் தோன்றி காட்சியளித்த நாள் செவ்வாய்கிழமையாகும். அவர்கள் உடுத்தியிருந்த புடவை வெள்ளைப்படவை. எனவே தான் தேர்த்திருவிழா செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. அந்நாளில் அம்மனுக்கு வெள்ளைச் சேலை அலங்காரம் செய்யப்படுகிறது என்றும் கூறுகின்றனர். தேர்த்திருவிழா நாளன்று இங்கு மற்றொரு சிறப்பையும் காண முடிகிறது. தேர் வீதியில் உலாவருகின்ற போது பக்தர்கள் அம்மன் மீது உப்பு வீசுவர். உப்பு நீரில் கரைவது போல் தங்கள் துன்பங்கள் உலா வருகின்ற அம்மன் அருளில் பட்டு நீங்கிட வேண்டும் என்று பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருக்கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதான திட்டம் நாள்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நினைத்த காரியத்தை நிறைவேற்றி பக்தர்களுக்கு நிறைந்த அருளைத் தந்து காத்து வரும் ஊட்டி அருள்மிகு மகாமாரியம்மன், மகா காளியம்மன் திருக்கோயிலில் செயல் அலுவலராக பொன்.சி.லோகநாதன் நிர்வகித்து வருகின்றனர்.
அன்புராஜன், ஊட்டி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.