முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அவ்வப்போது வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும், ஓமலூர், கூடலூர், சின்னக்கல்லார், கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீட்டரும், ஏற்காட்டில் 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து