முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்க்கரை நோய்க்கு காரணம் கரும்புதான் - உ.பி. முதல்வர் யோகி சொல்கிறார்

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ : கரும்புதான் சர்க்கரை நோய் வரக் காரணமாகிறது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது விவசாயிகள் வெறும் கரும்பு மட்டுமே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தக் கூடாது. வேறு பயிர்களையும் பயிரிட வேண்டும். அதிகமான கரும்பு விளைச்சலின் காரணமாக அதன் பயன்பாடு அதிகமாகும். அது சர்க்கரை நோய்க்கு காரணமாக அமையும். எனவே விவசாயிகள் காய்கறிகளை விளைவிப்பதிலும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும், காய்கறிகளுக்கு தற்போது டெல்லி மார்க்கெட்டில் அதிக விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து