எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைத்திட வேண்டும். தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 8,699 கோடி பங்கு தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழக முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணாவுக்கும், அம்மாவுக்கும் தமிழக அமைச்சரவை ஒருமனதாக பரிந்துரை செய்ததை ஏற்று, பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க கேட்டுக் கொண்டேன். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை என்றைக்கும் நினைவு கூறும் விதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் ரயில் நிலையம் என பெயரிட வேண்டுமென்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதையும் நிறைவேற்றித் தர வேண்டுமென்று பாரதப் பிரதமரிடத்திலே வலியுறுத்தியுள்ளேன்.
மேலும் உள்ளாட்சி அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிலுவை மானியங்களை விரைந்து வழங்க வேண்டுமென்றும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரதமரை வலியுறுத்தி உள்ளேன். சென்னை மாநகரத்தின் நிரந்தர வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் சுமார் ரூபாய் 4,445 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து வெள்ளத் தடுப்புப் பணி மேற்கொள்வதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டுமென்றும், 2017-18-ம் ஆண்டின் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையான 5,426 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
தமிழகத்தின் உரிமை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் கர்நாடக அரசின் மேகதாது நீர்த்தேக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளேன். மேலும் ரூபாய் 17,600 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள காவிரி நீர் பாசன மேம்பாடு மற்றும் மறுவாழ்வு திட்டத்திற்கு உரிய அனுமதியும் நிதியும் வழங்க வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கும் உதவித் தொகையை தொடர்ந்து வழங்கிடவும், தமிழ்நாட்டிற்கான நிலுவைத் தொகையினை உடனே வழங்கிட வேண்டுமென்றும் பிரதமரிடத்தில் கேட்டுக் கொண்டுள்ளேன்.
புயலினால் காணாமல் போகும் மீனவர்களை தேடி, மீட்டு வர ஏதுவாக, கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய ஒரு புதிய நிரந்தர கப்பல் படை தளம் அமைக்க வேண்டுமென்றும், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக வர வேண்டிய 8,699 கோடி ரூபாய் மத்திய அரசின் பங்குத் தொகையை உடனே விடுவிக்க வேண்டுமென்றும், மத்திய அரசு திட்டத்தின்கீழ், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென்றும் பிரதமரிடத்தில் கோரிக்கை வைத்துள்ளேன்.
மேலும் சேலம் உருக்காலையில் பயன்படுத்தாமல் உள்ள காலி நிலத்தில், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க ஆவன செய்யுமாறும், ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்திற்கு விமான போக்குவரத்து சேவையினை உடான் திட்டத்தின் கீழ் விரைந்து செயல்படுத்த வேண்டுமென்றும், தென்னை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை, சந்தை நிலவரத்திற்கு ஏற்ற வகையில், கிலோவிற்கு 75 ரூபாயிலிருந்து 105 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். இவை குறித்து விரிவான கோரிக்கைகளை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
உதகையில் 126-வது மலர் கண்காட்சி: மே 10-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது
28 Apr 2024ஊட்டி, உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே மாதம் 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள்: ஆஸ்திரேலியா அறிவிப்பு
28 Apr 2024கீவ், உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்
28 Apr 2024கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி.
-
முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்: வரும் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை
28 Apr 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்தோடு கொடைக்கானல் செல்கிறார்.
-
வன்முறைக்கு 2 வீரர்கள் பலி: உறுதியான நடவடிக்கை எடுப்போம்: மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உறுதி
28 Apr 2024இம்பால், சி.ஆர்.பி.எப்.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
28 Apr 2024ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
-
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
28 Apr 2024பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது