முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியை கண்டு தி.மு.க.வுக்குதான் பயம்: அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,ரஜினியை கண்டு தி.மு.க.வுக்குதான் பயம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மீனவர்கள் நலன் காப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக உள்ளது. இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றுவோம். சேலம் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இலவு காத்த கிளியாக ஸ்டாலினும், வால் அறுந்த நரியாக தினகரனும் உள்ளனர். ரஜினியை கண்டு பயப்படுபவர்கள் தி.மு.க.வினராகத்தான் இருப்பார்கள். ரஜினி கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.வின் வாக்கு  வங்கியில் கை வைக்க முடியாது. ரஜினி கட்சி தொடங்கினால் கவலைப்பட வேண்டியது திமுகதான், அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆடியோ வெளியிட்ட நபர் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து