முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் பார்லி. தேர்தலில் போட்டி: பொதுமக்களின் கருத்தை கேட்க பிரகாஷ்ராஜ் ஆட்டோவில் பயணம்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : பாராளுமன்ற தேர்தலில் போட்யிடும் பிரகாஷ்ராஜ் பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக ஆட்டோவில் சென்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து தீவிரமாக அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசை எதிர்த்து டுவிட்டரில் அடிக்கடி கருத்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும், அடுத்த சில தினங்களில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து பெங்களூரு மத்திய பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 8 சட்டசபை தொகுதியிலும் உள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிய பிரகாஷ் ராஜ் முடிவு செய்தார். ஆட்டோவில் சென்று பொதுமக்களை சந்திக்க அவர் முடிவு செய்தார். அதன்படி, 8 தொகுதிகளுக்கும், 8 ஆட்டோக்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிய திட்டமிட்டார்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி பெங்களூரு எம்.ஜி.ரோடு, மகாத்மா காந்தி சிலை அருகே நடைபெற்றது. அப்போது இதுபற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-

அரசியல்வாதிகளை விட நிபுணர்களை விட சாதாரண மக்களுக்குதான் நாட்டின் பிரச்சினைகள் பற்றி தெளிவாக தெரியும். எனவே அவர்களை நேரில் சந்திப்பதன் மூலம் பிரச்சினைகளை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடியும். அதற்காகவே பொது மக்களை சந்திக்க இந்த ஆட்டோ பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்கள் இந்த சுற்றுப் பயணம் நடைபெறும். அதன் மூலம் பொது மக்களிடமிருந்து அவர்களது பிரச்சினைகளை முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு சி.வி. ராமன் நகர் பகுதியில் இருந்து நடிகர் பிரகாஷ்ராஜ், ஆட்டோவில் சென்று பொதுமக்களை சந்திக்க பயணமானார். அவரது ஆட்டோவை பெண் ஓட்டுநர் ஓட்டிச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து