முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தல் - பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில், 4-ம் நாளான நேற்று அ.தி.மு.க. கூட்டணியில், கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. சார்பில் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் எல்.கே. சுதீஷ். ஈரோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறன், தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் மற்றும் தருமபுரி தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ், தென்சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும், புதுச்சேரி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தி.மு.க. கூட்டணி...

தி.மு.க. சார்பில் பொள்ளாச்சியில் சண்முகசுந்தரம், திருவண்ணாமலையில் அண்ணாதுரை, பூந்தமல்லியில் கிருஷ்ணசாமி, தஞ்சையில் டி.கே.ஜி. நீலமேகம், ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ.வேட்பாளர் சு.வெங்கடேசன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

நடிகர் பிரகாஷ்ராஜ்...

நாம் தமிழர் கட்சி சார்பில், மத்திய சென்னை தொகுதியில் கார்த்திகேயன், திருவள்ளூர் தொகுதியில் வெற்றிச்செல்வி, கடலூர் தொகுதியில் சித்ரா, தேனி தொகுதியில் சாகுல் ஹமீது, திண்டுக்கல் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். புதுச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுப்ரமணியம், பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து