முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 3 நாட்கள் பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

வேலூர் பார்லிமெண்ட் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து 29- ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

வேலூர் பாராளுமன்ற மக்களவை தொகுதிக்கான பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான . ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வரும் 29, 30 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு, கீழ்வைத்தியனாண்குப்பம், குடியாத்தம், வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். வரும் 29-ம் தேதி மாலை 4 மணியளவில் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஒடுகத்தூர் பேரூராட்சியிலும், கே.வி.குப்பம் தொகுதியில் உள்ள லத்தூரில் மாலை 6 மணிக்கும், 30-ம் தேதி குடியாத்தம் தொகுதியில் உள்ள பேரணாம்பட்டு நகரில் மாலை 4 மணிக்கும், வேலூர் நகரில் மாலை 6 மணிக்கும் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதன் பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு வாணியம்பாடி தொகுதியில் ஆலங்காயம் அன்று மாலை 6 மணி ஆம்பூர் நகரத்திலும் துணை முதல்வர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் என்று அ.தி.மு.க. செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து