முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் 7-ம் தேதி நிறை புத்தரிசி பூஜை

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை விழாவின் தொடக்கமாக சகல ஐஸ்வர்யம் கிடைக்கவும், செல்வம் பெருகவும் நடத்தப்படும் நிறை புத்தரிசி பூஜை வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை விழாவின் தொடக்கமாக சகல ஐஸ்வர்யம் கிடைக்கவும், செல்வம் பெருகவும் ஆண்டுதோறும் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்று வருகிறது. அப்போது, விளைந்த நெற்கதிர்களை கோவில் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆண்டில் நிறை புத்தரிசி பூஜை வழிபாடு வருகிற 7- ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை வருகிற 7- ம் தேதி நடக்கிறது. இதற்காக கோவில் நடை 6- ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். மறுநாள் நிறைபுத்தரிசி பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். பின்னர், இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16- ம் தேதி மாலை திறக்கப்படும். 17- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து