முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி சந்திப்பு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை :  சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திடீரென சந்தித்தார். அப்போது சட்டம்,ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. அவருடன் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம்ஜென்மபூமி வளாகத்தில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் வெகுவிரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையடுத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சட்டம்,ஒழுங்கு குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டம்,ஒழுங்கை பேணிபாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பேணிகாப்பது குறித்து கவர்னருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இருவரும் அரைமணி நேரம் விவாதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து