முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கன மழை: வானிலை மையம்

திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்து 48 மணி நேரத்திற்குள் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று தெரிகிறது.

சேலம், கரூர், கோவை, நீலகிரி,  திண்டுக்கல், தருமபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடலோர மாவட்டங்களில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும்,  மதுரை, திருச்சி, தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை  மையம் கூறியுள்ளது.

அடுத்து நான்கு நாட்களுக்கு தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 7 செ மீ மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து