முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடை நீட்டிப்பு: ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அண்ணா பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடையை நீட்டிப்பு செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2018-ம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா, கடந்த 11-ம் தேதி ஓய்வு பெற்றார். அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் சூரப்பா தன்னிச்சையாக செயல்பட்டது,

மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு மறுப்பு போன்ற விவகாரங்களால் சர்ச்சை எழுந்தது. அதுமட்டுமில்லாமல், சூரப்பா ரூ. 248 கோடி ஊழல் செய்வதாகவும் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில், சூரப்பாவுக்கு எதிரான விசாரணை நடத்த கலையரசன் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. கலையரசன் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அந்த வழக்கு நேற்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலையரசன் தலைமையிலான ஆணையம் செல்லத்தக்கதல்ல. அரியர் ஆல்பாஸுக்கு ஒத்துக் கொள்ளாததால் என்னை பதவி நீக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் ஆணையம் தன்னை விசாரிக்க முடியாது என சூரப்பா வாதிட்டார்.

இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அண்ணா பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடையை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து