முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 26-ம் தேதிக்கு பின் நட்டாவின் முடிவை பின்பற்றுவேன்: எடியூரப்பா

வியாழக்கிழமை, 22 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு: வரும் 26-ம் தேதிக்குப் பிறகு ஜே.பி. நட்டாவின் முடிவை பின்பற்றுவேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தொண்டர்கள் யாரும் கட்சிக்கு அவமரியாதை மற்றும் சங்கடத்தை ஏற்படுத்து விதமான எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனிடையே முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து மடாதிபதிகள், பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சோந்த எம்.பி.பாட்டீல், ஷாம்னூா் சிவசங்கரப்பா உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருந்தனா். இந்நிலையில் 2 ஆண்டுகள் நிறைவுக்கு பிறகு கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஜூலை 26-ம் தேதியுடன் கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் பிறகு என்ன முடிவு என்பதை ஜே.பி.நட்டா முடிவு செய்வார். அதனை நான் பின்பற்றுவேன். பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்வதே எனது பணி. இதில் எந்த மாற்றமும் இல்லை. கட்சித் தொண்டர்கள், மடாதிபதிகள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து