முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய நடைமுறைப்படியே நெல் கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சசிகலா கோரிக்கை

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

நெல் கொள்முதலில் பழைய நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். 

 இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஆன்லைன் நடைமுறையில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளை தவிக்க வைத்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த ஆண்டுகளில் விவசாயிகள் வி.ஏ.ஓ.விடம் சென்று சிட்டா அடங்கல் வாங்கி விட்டு, அதனை கொள்முதல் நிலையங்களில் கொடுத்தாலே போதும். ஆனால் ஆன்லைன் முறையால் அரசு இ-சேவை மையங்களில் பதிவுசெய்து அதனை வி.ஏ.ஓ.விடம் கொடுத்து சிட்டா அடங்கல் பெற்று நெல்லை விற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. ஆன்லைன் பதிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால் படிப்பறிவு பெற இயலாத விவசாயிகளால் என்ன செய்ய முடியும்?

தி.மு.க. அரசின் அணுகுமுறைகளைப் பார்க்கும்போது விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யும் விருப்பம் இல்லாதாது போல் தெரிகிறது. ஆகவே பழைய நடைமுறையின்படியே விவசாயிகள் நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இதுபோன்ற ஜீவாதார பிரச்சினைகளில் தனிக்கவனம் செலுத்தி அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் தான் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும் என்று அதில் சசிகலா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து