முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் இருந்து விடுதலையான இலங்கையில் இருந்து 4 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்

வியாழக்கிழமை, 19 மே 2022      தமிழகம்
Fishermen-2022-05-19

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 4 பேர் சென்னை வந்தனர். 

திருவள்ளூர் ராமநாதபுரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் மத்திய அரசின் உதவியுடன் இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். 

பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் 4 மீனவர்களையும் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த 4 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அவர்களின் சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து