எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆதாரை இணைக்க வரும் பொதுமக்களை நிற்க வைக்காமல் அவர்களுக்கு உட்கார போதிய இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆதாரை பதிவு செய்ய...
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ம் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
மீண்டும் அறிவிப்பு...
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மின் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் 'வெப்சைட்டுக்குள்' சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள். மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.
சிறப்பு முகாம்கள்...
இதற்காக தமிழ்நாடு மின்வாரியம் மூலம் செயல்பட்டு வரும் 2,811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் நடந்த சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5 லட்சம் பேர்...
அப்போது அவர் கூறுகையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். ஒருவருக்கு எத்தனை இணைப்பு இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார். மொத்தம் உள்ள 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில், 1.15 கோடி மின் இணைப்புதாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின் வாரியத்தில் உள்ளது. இதன் பிறகு இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்திருக்கிறார்கள்.
அறிவுறுத்தல்கள்...
ஆனாலும் சில மையங்களில் 'சர்வர்' பிரச்சினை காரணமாக ஆதாரை இணைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் மக்கள் நீண்ட கியூவில் காத்திருந்து ஆதாரை இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாரை இணைப்பது தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் என்னென்ன வசதிகள் செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். மேலும் இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து பிரிவு மண்டல பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது.,
- * ஆதாரை இணைக்க வரும் பொதுமக்களை நிற்க வைக்காமல் அவர்களுக்கு உட்கார போதிய இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
- * ஆதார் புதுப்பிப்பு பணிக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- * தேவைப்பட்டால் சாமியானா பந்தல் அமைக்க வேண்டும்.
- * ஆதார் இணைப்பை விளக்குவதற்கும், அதை செய்து கொடுப்பதற்கும் தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும்.
- * கம்ப்யூட்டரில் சர்வர் கோளாறு ஏற்பட்டாலோ மெதுவாக இயங்கினாலோ அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
- * தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கம்ப்யூட்டர் தயாராக வைத்திருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஆதார் இணைக்கும் பணி பாதிக்கப்படக்கூடாது.
- * தேசிய விடுமுறை மற்றும் விழா நாட்களை தவிர ஞாயிறு உட்பட ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு கவுண்டர்கள் செயல்பட வேண்டும். டீ பிரேக், மதிய உணவு இடைவேளையின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
- * மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து எந்த தொகையும் வசூலிக்க கூடாது. லஞ்சம் கேட்கக் கூடாது. யாராவது பணம் வாங்கியதாக புகார் வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதை கவனிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
- * மின் வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதாரை இணைக்கும் பணி முன்னேற்றத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
- * மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்த விவரங்களை ஒவ்வொரு அலுவலகத்திலும் பிளக்ஸ் பேனர் வைத்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அரசியல் கட்சியினர் நீர் மோர் பந்தல் திறக்கலாம் : தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அனுமதி
01 May 2024சென்னை : 'அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் திறக்க ஆட்சேபனை இல்லை; ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்' என தமிழக தலை
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான் : ஆலங்குடி, குருவித்துறையில் சிறப்பு வழிபாடு
01 May 2024திருவாரூர் : மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.19 மணிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
01 May 2024புதுடெல்லி : போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
சந்திரசேகர் ராவ் தேர்தல் பிரசாரம் செய்ய தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு
01 May 2024ஐதராபாத் : தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி(பிஏர்எஸ்) கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.