முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது முறையாக துருக்கி அதிபராக பதவியேற்று கொண்டார் எர்டோகன்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      உலகம்
Erdogan 2023-06-04

Source: provided

அங்காரா : துருக்கியின் அதிபராக எா்டோகன் 3-வது முறையாக நேற்று  முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
துருக்கி அதிபா் தோ்தல் கடந்த மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. அதில் யாருக்கும் 50 சதவீதத்தும் மேல் வாக்குகள் கிடைக்காததால் 2-ம் கட்ட தோ்தல் மே மாதம் 28-ம் தேதி நடைபெற்றது.
இதில் எா்டோகனுக்கு 52.18 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவரை எதிா்த்துப் போட்டியிட்ட கெமால் கிளிச்தரோக்லுவுக்கு 47.82 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தத் தோ்தல் முடிவுகள்  அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, 3-வது முறையாக அவா் அதிபர் பொறுப்பை ஏற்றாா். ஏற்கெனவே 20 ஆண்டுகள் துருக்கியின் அதிபராகப் பொறுப்பு வகித்துள்ள 69 வயது எா்டோகன், இந்தப் பதவியேற்பின் மூலம் தனது மொத்த பதவி காலத்தை கால் நூற்றாண்டாக நீட்டிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தோ்தலில் அரசு இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி எா்டோகன் முறைகேட்டில் ஈடுபட்டதாக எதிா்க்கட்சி கூட்டணி வேட்பாளா் கெமால் கிளிச்தரோக்லு குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து