எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: எங்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் நாங்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) அறிவித்துள்ளது.
கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலைஉயிரிழந்தார். இதையடுத்து படப்பிடிப்புகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை முன்னிட்டு சென்னையில் இன்று ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதில் பல்வேறு 7 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, “தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ‘இந்தியன் 2’ தொடங்கி ‘சர்தார் 2’ வரை 25 பேர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு அகால மரணமடைந்துள்ளனர். தகுந்த பாதுகாப்பு இல்லாமல், சில நேரங்களில் அலட்சியம், கவனக்குறைவின்மை, போதிய வசதிகள் இல்லாததால் இந்த விபத்துகள் ஏற்படுகின்றன. பலமுறை நாங்கள் இது குறித்து பேசி வருகிறோம். இம்முறை முதன் முறையாக சம்பந்தப்பட்ட அனைத்து சங்க உறுப்பினர்களையும், அழைத்து பேசியுள்ளோம். பாதுகாப்பு என்பது நம் உயிர் தொடர்புடைய விஷயம். அலட்சியம், கவனக்குறைவு இருக்க கூடாது என்பது குறித்து விரிவாக கூட்டத்தில் பேசினோம்.
இதில் தயாரிப்பாளர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என்பது தான் தயாரிப்பாளர்களின் கடமை. அதன்பிறகு நடக்கும் சிக்கலுக்கு ஏதோ ஒரு உறுப்பினர் தான் காரணமாக இருக்கிறார். கடைசியாக நிகழ்ந்த விபத்தில் கூட, படப்பிடிப்பு தளத்தில் கயிறு உறுதியாக இல்லாமல் அறுந்து விழுந்துள்ளது. இதனை உறுதி செய்வது தயாரிப்பாளரின் வேலையில்லை. சம்பந்தப்பட்ட உதவியாளரோ, ஸ்டூடியோ பொறுப்பாளரோ தான் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் எங்களின் உறுப்பினர்களுக்கு 60-70 சதவீதம் பொறுப்பு உண்டு. எங்கள் உறுப்பினர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதால் அவர்கள் அனைவரையும் அழைத்து பேசியுள்ளோம்.
எங்களுக்குத் தெரிந்த மற்றொரு பிரச்சினை என்னவென்றால், சீக்கிரம் செட் அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இன்றுக்கு ஜூலை 25-ம் தேதி என வைத்துக்கொண்டால், திடீரென்று ஒரு ஹீரோ அழைத்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு வைத்து கொள்ளலாம் என்கிறார். 3, 6 மாதம் முன்பு சொல்லவேண்டும். ஒரு செட் போட வேண்டுமென்றால், 45 முதல் 50 நாட்கள் தேவைப்படும். காரணம் இன்றைக்கு எல்லாமே பிரமாண்ட செட்டாக மாறிவிட்டது.
எங்கள் உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடும், விபத்து காப்பீடும் தயாரிப்பாளர் ஏற்படுத்தி தர வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் ஆம்புலன்ஸை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவை எங்களின் குறைந்தபட்ச கோரிக்கை. பாதுகாப்பு பெல்ட் கொடுக்க வேண்டும். க்ளவுஸ், ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் இதனை அமல்படுத்த வேண்டும். இதனை ஏற்பாடு செய்து கொடுக்காவிட்டால் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் நாங்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டோம். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களின் 1 சதவீத ஊதியத்தை கொடுங்கள் என கூறினோம். அது குறித்து யாரும் கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 12 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்1 week 3 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 8 hours ago |
-
பப்புவா நியூ கினியாவில் போப் சுற்றுப்பயணம்: மோதலை கைவிட பழங்குடியினருக்கு வேண்டுகோள்
07 Sep 2024போர்ட் மோர்ஸ்பி, பப்புவா நியூ கினியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் பழங்குடியின மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வேண்டுகோள் வ
-
தமிழகத்தில் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
07 Sep 2024சென்னை, தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,000 கனஅடியாக அதிகரிப்பு
07 Sep 2024ஈரோடு, நீலகிரியில் பரவலாக மழை பெய்ததால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 6,431 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
மீனவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
07 Sep 2024சென்னை, வரும் 9-ம் தேதி தூத்துக்குடி மீனவர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
07 Sep 2024சென்னை, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி: உயர்கல்வி துறை தகவல்
07 Sep 2024சென்னை, தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10,000 வரை நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித் துறை தெரிவித்
-
இ-ஆபீஸ் வழியே தமிழக அரசு பணி தொடர்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
07 Sep 2024சான் பிரான்சிஸ்கோ, அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.
-
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
07 Sep 2024சென்னை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
வெள்ள ஆய்வின் போது திடீரென எதிரே வந்த ரயில் உயிர் தப்பிய சந்திரபாபு நாயுடு
07 Sep 2024விஜயவாடா, பாலத்தில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த போது ரயில் வர, பாதுகாவலர்களால் நூலிழையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்
-
தமிழக வங்கி சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம்: அமெரிக்காவில் வங்கி அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
07 Sep 2024சிகாகோ, தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவின் பிஎன்ஓய் மேலன் அத
-
விநாயகர் சதுர்த்தி திருநாள்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
07 Sep 2024புது டெல்லி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி.
-
குரூப் 1 தேர்வு மூலச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
07 Sep 2024சென்னை, குரூப் 1 தேர்வு மூல சான்றிதழை வரும் 16-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
-
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஜனாதிபதி முர்முவுக்கு மசோதாவை அனுப்பி வைத்தார் மே.வங்க கவர்னர்
07 Sep 2024கொல்கத்தா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அம்மாநில கவர்னர் அனுப்பி வைத்துள்ளார்.
-
இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க பெண் உயிரிழப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்
07 Sep 2024வாஷிங்டன், இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பெண் பலியான சம்பவத்திற்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கண்டனம் தெரிவித்
-
வேலி தாண்டிய பாக். ஆடுகள்: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வந்து புது பிரச்சனை
07 Sep 2024ஜெய்ப்பூர், வேலி தாண்டி, இந்திய எல்லைக்குள் புகுந்த ஆடுகளை என்ன செய்வது என்று தெரியாமல், எல்லைப் பாதுகாப்பு படையினர் பரிதவிக்கின்றனர்.
-
விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்
07 Sep 2024திருப்பத்தூர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது.
-
நவ.1-முதல் படப்பிடிப்பு ரத்து என சினிமா தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு: பரிசீலனை செய்ய தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல்
07 Sep 2024சென்னை, நவம்பர் 1-ம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்ற அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தி உ
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி: டிரோன் தாக்குதலால் மக்கள் அச்சம்
07 Sep 2024இம்பால், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த புதிய வன்முறையில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
-
சட்டசபை தேர்தலுக்கு பிறகு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
07 Sep 2024ஜம்மு, சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
07 Sep 2024தஞ்சாவூர், ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு விவகாரத்தை தொடர்ந்து பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்ச
-
ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் படை
07 Sep 2024காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் கடந்த 10 நாள்களாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் படையினா் அங்கிருந்து வ
-
பேச்சாளர் மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு விளக்கம்
07 Sep 2024சென்னை, ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா பேட்டியளித்துள்ளார்.
-
பாகிஸ்தானுடன் பேச வாய்ப்பை கிடையாது: காஷ்மீரில் அமித்ஷா பேச்சு
07 Sep 2024ஜம்மு, காஷ்மீரில் அமைதி நிலவும் வரை பாகிஸ்தானுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடையாது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-09-2024
07 Sep 2024