முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவிலும் திடீர் நிலச்சரிவு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      இந்தியா
Kerala-2024-07-30

Source: provided

பெங்களூரு: கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மிக கனமழை பெய்தது. கேரளாவில் உள்ள வயநாட்டில் நேற்று அதிகாலை பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், கர்நாடகத்தின் மங்களூரு-பெங்களூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ஷீரடி காட் சக்லேஷ்பூர் டோடா பகுதியில் நேற்று திடீரென மிகபெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்தன. மண்ணுக்குள் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதையடுத்து அந்த தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து போக்குவரத்தையும் கர்நாடக அரசு தடை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து