எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயநாடு, கேரள மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த 3 நிலச்சரிவுகளில் சிக்கி 2 கிராமங்கள் புதைந்ததில் 128 பேர் பலியாகினர். நிலச்சரிவில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை மீட்கும் பணிகளில் இந்திய ராணுத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
2 மலை கிராமங்கள்...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அமைந்துள்ளது கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம். இங்கு தமிழக எல்லை சோதனை சாவடியான சோலாடியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மேப்பாடி அமைந்துள்ளது. இங்கு மலைகளுக்கிடையே முண்டக்கை மற்றும் சூரல்மலை கிராமங்கள் அமைந்துள்ளன. தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகள், சுற்றுலா தளங்கள் நிறைந்த பகுதி. இந்த பகுதிகளில் கனமழை பெய்து, தண்ணீர் பெருக்கெடுத்தது. இதில் ஆற்றின் கரையோர மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் காட்டாற்று வெள்ளம் அதிகரித்ததால், முகாம்களில் தங்க வைக்கபட்டவர்கள் மேடான பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
3 முறை நிலச்சரிவு...
இந்நிலையில் நேற்று (ஜூலை30) அதிகாலை 1 மற்றும் 2 மணி, 3மணி என 3 முறை முண்டக்கை பகுதியில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு, முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் வெள்ளம், மண், பாறைகள் ஆகியன குடியிருப்புகள், கடைகள், பள்ளிகள், கோவில்கள் மேல் விழுந்தன. அதில் வீடுகளில் உறங்கிகொண்டிருந்த மக்கள் மண்ணில் புதைந்ததுடன், பெரும்பாலானோர் உடல்கள் மலப்புரம் சாலியாறு ஆற்றிற்கு அடித்து செல்லப்பட்டது. வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பள்ளிகள் மற்றும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மண் சரிவு சிக்கிய பகுதிகளில், உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டது.
100 வீடுகளை....
சூரல்மலை பகுதியில் பாலம் அடித்து செல்லப்பட்டதால், முண்டக்கை பகுதிக்கு யாரும் செல்ல முடியவில்லை. மீட்பு குழுவினர் கயிறு கட்டி, உயிரிழந்த உடல்களையும், காயமடைந்தவர்களை மீட்டனர். சூரல்மலை பகுதி ஆற்றிலும் உடல்கள் மீட்கப்பட்டது. தொழிலாளர்கள் குடியிருந்த 100 வீடுகளை காணவில்லை. இதில் இருந்த தமிழக, கேரளா மற்றும் வடமாநில தொழிலாளர்களை காணாமல் போயுள்ளனர். 500 க்கும் மேற்பட்ட கிராமத்து வீடுகள் இருந்த சுவடே காணாமல் போயுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி ஒரு பக்கம் இடிந்ததுடன், வகுப்பறைகளில் பெரிய மரங்கள் மற்றும் மண் நிறைந்து காணப்பட்டது.
தேடுதல் பணியில்....
சிவன் கோவில் முழுமையாக இடிந்து தரை தளம் மட்டுமே உள்ளது. மீட்பு பணிகளில் கேரளா மட்டுமின்றி தமிழக சமூக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழக மருத்துவ குழுவினரும் வயநாட்டில் முகாமிட்டுள்ளனர். முண்டக்கை பகுதியில் மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு குழுவினர் ஓடி தப்பியுள்ளனர். எனினும் முண்டக்கை பகுதிக்கு செல்ல முடியாத நிலையில், மீட்பு பணி தொடர்கிறது. இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் வேதனை...
வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் 11 பேரின் உடல்கள் சாலியாற்றில் மிதந்தது பொது மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இருட்டுக்குத்தி, பொதுகல்லு, பனம்காயம், பூதனம் பகுதிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. கைகள், கால்கள், தலைகள் என உடல் பாகங்கள் தனித்தனியே அடித்துச் செல்லப்பட்டதை கண்டதாக கும்பிலபாரா பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மழை காரணமாக நிவாரண முகாமாக செயல்படவிருந்த அரசு பள்ளியும் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டது.
ரெட் அலெர்ட்...
நிலச்சரிவு காரணமாக அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் மாநில அரசு ரத்து செய்துள்ளது. கனமழை காரணமாக சுற்றுலா தலங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் வயநாடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. மீட்பு பணி நடக்கும் சுரல்மலை பகுதியில் மழை பெய்து வருகிறது . இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மலப்புரம், கோழிக்கோட்டிலும் நிலச்சரிவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிவாரண பணிகளை...
கேரள முதல்வரிடம் போனில் தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். கேரளாவுக்கு முழு உதவி செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை கிராமத்தில் பாயும் வெள்ளத்திற்கு மத்தியில் சேற்றில் மூழ்கிய நபர் ஒருவர், ஒரு பெரிய பாறையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடும் காட்சிகள் வெளியாகின. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க சீரம் சம்பசிவ ராவ் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை கேரள அரசு நியமித்து உள்ளது.
2 நாட்கள் துக்கம்....
நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நேற்றும், இன்றும் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர், மரப்பாலம் அட்டி கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், 30, என்பவர், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மண் சர்வில் உயிரிழந்தார். நிலச்சரிவு நிகழ்ந்த கேரளாவில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா பகுதிகளில் மீண்டும் வலுக்கும் கனமழை பெய்து வருகிறது. மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
ஹெலிகாப்டர்கள்...
விமானப்படை ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட உடன் உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதனையடுத்து காலாட்படை பட்டாலியனைச் சேர்ந்த 225 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மருத்துவ அதிகாரிகள் குழு தலைமையில், 40 பேர் அடங்கிய குழவினர் மீட்பு பணிக்கு உதவுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். குன்னூர் கண்டோன்மென்டில் இருந்தும் 2 குழுவினர் வயநாடு விரைந்து உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே, விமானப்படைக்கு சொந்தமான ஏஎல்எச் மற்றும் எம்ஐஐ 7 ஹெலிகாப்டர்களும், சாரங் வகை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் முன்னின்று உதவி வருகின்றன. இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 1 day ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்1 week 4 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 1 day ago |
-
சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை
08 Sep 2024தென்காசி : சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆதி திராவிட மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
08 Sep 2024சென்னை : ஆதி திராவிட மாணவர்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
உலக இயன்முறை மருத்துவ தினம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
08 Sep 2024சென்னை : உலக இயன்முறை மருத்துவ தினத்தையொட்டி அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாலியல் புகாருக்கு உள்ளான நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை : தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
08 Sep 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க 68-வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது.&n
-
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு : 3 பேரை தேடும் பணி தீவிரம்
08 Sep 2024தஞ்சாவூர் : கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.
-
மூடநம்பிக்கை செயல்கள் பள்ளிகளில் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்
08 Sep 2024புதுக்கோட்டை : பள்ளிகளில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
-
அறநிலையத் துறைக்கு திராவிட மாடல் ஆட்சிதான் பொற்காலம் : அமைச்சர் பி.கே.சேகர் பாபு பெருமிதம்
08 Sep 2024நெல்லை : திராவிட மாடல் ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் பொற்கால ஆட்சியாக கருதப்படும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2024
08 Sep 2024 -
GOAT - திரை விமர்சனம்
08 Sep 2024இளையதளபதி விஜய், இயக்குர் வெங்கட் பிரபு ஏஜிஎஸ் கூட்டணியில் விஜய் மற்றும் விஜயகாந்த் கேமியோ என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி சமீபத்தில் வெளியுள்ள படம் தி கிரேட்டஸ்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2024
08 Sep 2024 -
இஸ்ரேலிய பயங்கரவாதம்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டணிக்கு துருக்கி அதிபர் எர்டோகன் அழைப்பு
08 Sep 2024அங்காரா : இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டணி அமைக்க இஸ்லாமிய நாடுகளுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
-
லக்னோ கட்டிட விபத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு : பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
08 Sep 2024லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா, சீனாவால் உதவ முடியும் : இத்தாலி பிரதமர் மெலோனி கருத்து
08 Sep 2024ரோம் : உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும் என்று இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.
-
தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் : நடிகர் விஜய் அறிவிப்பு
08 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் : வில்லன் நடிகர் விநாயகன் கைது
08 Sep 2024திருவனந்தபுரம் : ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிரபல வில்லன் நடிகர் விநாயகனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகி
-
மத்திய வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது : தமிழகத்தில் 14-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
08 Sep 2024சென்னை : மத்திய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பீகாரில் இணைப்பு உடைந்ததால் 2-ஆக பிரிந்த மகத் எக்ஸ்பிரஸ் ரயில்
08 Sep 2024பாட்னா : டெல்லியில் இருந்து இஸ்லாம்பூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்த மகத் விரைவு ரயிலின் இணைப்பு உடைந்ததால் ரயில் இரண்டாக பிரிந்ததாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.&
-
மம்தாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் எம்.பி. ஜவ்கர் சிர்கார்
08 Sep 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை அரசு கையாண்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்க
-
ஐநா பொதுச் சபையில் பிரதமர் மோடியின் உரை கிடையாது : உத்தேச பட்டியல் வெளியீடு
08 Sep 2024வாஷிங்டன் : ஐ.நா. சபை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட பேச்சாளர் பட்டியலில் பிரதமர் மோடியின் பெயர் இடம் பெறவில்லை.
-
ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி? - இன்று நடக்கும் கூட்டத்தில் முடிவு
08 Sep 2024புதுடெல்லி : ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.
-
டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு : நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
08 Sep 2024சென்னை : படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2024
08 Sep 2024 -
வியட்நாமில் கரையை கடந்தது யாகி புயல்: 14 பேர் உயிரிழப்பு
08 Sep 2024ஹனோய் : வியட்நாமில் யாகி சூறாவளி புயல் கரையை கடந்தது. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மத்திய நிதித்துறை செயலராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
08 Sep 2024புதுடெல்லி : மத்திய அரசின் நிதித்துறை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்
-
அசாமில் புதிய ஆதார் கார்டு பெற கட்டுப்பாடு விதிப்பு : முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தகவல்
08 Sep 2024கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தேசிய குடிமக்கள் பதிவேடு விண்ணப்ப ரசீது எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில முத