முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு 1.50 லட்சம் : கன அடியாக அதிகரிப்பு

புதன்கிழமை, 31 ஜூலை 2024      தமிழகம்
Mettur Dam 2023-06-02

மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 81,500 கன அடியிலிருந்து 1,50,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி வீதமும்; 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 78,500 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 82,000 கன அடியாக உள்ளது. கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும்; நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 8 மணி முதல் வினாடிக்கு 1,00,00 கன அடியிலிருந்து 1,25,000 கன அடியாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கிடையே மேட்டூர் உபரி நீர் திட்டத்தில், மேட்டூர் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டர்கள் மூலம் காவிரி உபரிநீரை 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேற்று தொடங்கி வைத்தார்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூ 673.88 கோடியில், சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் எட்டியது. அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாகவும், நீர் மின் நிலையம், கால்வாய் வழியாகவும் விநாடிக்கு 1,50,000 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1.75 லட்சம் கன அடியாக மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக 1,03,500 கன அடியும், அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடியும் மற்றும் கால்வாய் வழியாக 500 கன அடியும் என மொத்தமாக 1,25,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கான நீர்வரத்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 68,168 கன அடியாக இருந்த நிலையில், நேற்று நீர்வரத்து திடீரென 1,25,000 கன அடியாக அதிகரித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து