எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில், சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அவ்வழக்கின் முடிவை பொறுத்து அக்கோரிக்கை குறித்து முடிவெடுக்கப்படும், என்று நிறுவனம் தெரிவித்துள்ளதால் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனே பணிக்குத் திரும்ப வேண்டும். என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (அக்.8) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்குப் பின்னர், “தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.,
சாம்சங் நிறுவன தொழிலாளர் பிரச்சினையை பொறுத்தவரை தமிழக முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். 7 முறை தொழிலாளர் துறை சார்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இன்னும் தீர்வு எட்டபடாத வகையில் உள்ளது. இந்த போராட்டத்துக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்ததன் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். மூன்று அமைச்சர்கள் சேர்ந்து 10 முதல் 12 மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. முதலில், நிறுவனத்திடம் பேசினோம், பின் சிஐடியு மற்றும் அதுசார்ந்த தோழர்களிடம் பேசி அவர்களுடைய கருத்துகளைப் பெற்றோம். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களிடமும் பேசினோம். தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தால், வேலை வாய்ப்பு வழங்கியவர்கள் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள். சிஐடியு சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அவர்களுடைய மற்ற கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.
இந்த சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், எதுவும் செய்ய முடியாது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த ஒரே ஒரு கோரிக்கைக்காக தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். அந்த நிறுவனத்தில், சமீபத்தில் திருமணமான இளைஞர்கள் பலர் பணிபுரிகிறார்கள். 12-ம் வகுப்பு, ஐடி படித்தவர்களுக்கு கூட எழுபதாயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகிறார்கள். ஆனால், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் முறையாக பணிக்கு வராமல் இருந்து வருவதாக, நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு வந்து கையெழுத்து போட வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அனைத்து மாதங்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளனர். 5 பேருந்துகளில் குளிர்சாதன வசதி உள்ள நிலையில், மேலும் 108 பேருந்துகளுக்கும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தி தருவதாக கூறியிருக்கிறார்கள். உயர்தர உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், கழிவுநீர் வசதிகளை சரி செய்து தருவதாகவும் கூறியிருக்கிறார்கள். வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தாலும் அதையும் நிறைவேற்றி தருவதாகவும், சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கின் முடிவை பொறுத்து அக்கோரிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் நிறுவனத்தின் தரப்பில் கூறி உள்ளனர்.
தமிழக முதல்வர் நேரடியாக இதில் தலையிட்டு, மூன்று பொறுப்பு அமைச்சர்களை நியமித்து, பலகட்ட பேச்சு வார்த்தை நடத்திய பிறகும், இன்னும் போராட்டத்தை தொடர்வது ஏன் என்று தெரியவில்லை. வேலை செய்யாத ஒவ்வொரு நாளும் அந்த குடும்பத்துக்கும் ஊதியம் கிடைக்காது. இந்த ஒவ்வொரு நாள் தாமதத்தால், ஊதியம் பாதிக்கும். இன்னும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் தொழிலாளர்கள் பக்கம் நிற்கிறார். எனவே, தொழிலாளர்கள் அனைவரும் தயவுசெய்து உடனே பணிக்கு திரும்ப வேண்டும். என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
கரூரில் ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவி கடத்தல்; மர்ம நபருக்கு வலைவீச்சு
10 Mar 2025கரூர் : கரூரில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற மர்ம நபர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-03-2025.
10 Mar 2025 -
தமிழர்கள் குறித்த பேச்சுக்கு கனிமொழி எதிர்ப்பு: எனது வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருத்தம்
10 Mar 2025புதுடெல்லி : தமிழக அரசை, தமிழக எம்.பி.,க்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறினேன் என்று கனிமொழி கூறினார். நான் அவ்வாறு கூறவில்லை.
-
தூத்துக்குடி அருகே ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
10 Mar 2025தூத்துக்குடி : ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமைதியை நிலைநாட்டுவோம்: சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் அதிபர்
10 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் அமைதியை நிலை நாட்டுவோம் என்று அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
சுனிதா வில்லியம்ஸ் வரும் 16-ம் தேதி பூமிக்குதிரும்புகிறார்: நாசா அறிவிப்பு
10 Mar 2025வாஷிங்டன், விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதியை நாசா அறிவித்துள்ளது.
-
பார்லி. மக்களவையில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்க ராகுல் வலியுறுத்தல்
10 Mar 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
கராச்சியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலி
10 Mar 2025கராச்சி, கராச்சியில் ஆப்கானியர்கள் தங்கியுள்ள முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.
-
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு
10 Mar 2025சென்னை : லண்டனில் தனது முதல் சிம்பொனி அரங்கேற்றத்துக்பின் திங்கள்கிழமை சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
நெல்லை, குமரி உள்பட தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
10 Mar 2025சென்னை, தமிழகத்தில் மார்ச் 11 ஆம் தேதி (இன்று) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழக எம்.பி.க்களை அநாகரிகமானவர்கள் என்பதா? - மத்திய கல்வி அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
10 Mar 2025சென்னை : நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
-
நடிகை ரன்யா ராவுக்கு அரசு நிலம்: காங்கிரஸ் அமைச்சருக்கு தொடர்பா? கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு
10 Mar 2025பெங்களூரு, தங்கம் கடத்தல் வழக்கில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.
-
போரூர் ஏரியில் மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய ஆண் சடலம்..!
10 Mar 2025சென்னை : போரூர் ஏரியில் மீனுக்கு விரித்த வலையில் ஆண் சடலம் சிக்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
தனுஷ்-நயன்தாரா வழக்கு விசாரணை: ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
10 Mar 2025சென்னை, தனுஷ்-நயன்தாரா வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: கனிமொழி
10 Mar 2025புதுடெல்லி, மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்" என்று கூறினார்.
-
தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுப்பு: தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளி; பார்லி. மக்களவை ஒத்திவைப்பு
10 Mar 2025புதுடெல்லி : தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
-
உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முகவரி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
10 Mar 2025சென்னை : இந்தியாவில் தொழில் நுழைவுவாயிலாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கச்சத்தீவு திருவிழா: படகுகளை இன்று ஆய்வு செய்யும் மீன்துறை அதிகாரிகள்
10 Mar 2025சென்னை : கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் குறித்து மீன்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்கின்றனர்.
-
மணிப்பூரில் 12 கிளர்ச்சியாளர்கள் கைது
10 Mar 2025இம்பால் : மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட ஆயுதக்குழுக்களை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
-
7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி: பா.ம.க. நிழல் நிதி அறிக்கை வெளியீடு
10 Mar 2025விழுப்புரம் : அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று பாமக நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவைகள் அறிவிப்பு
10 Mar 2025சென்னை : சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பார்லி. மக்களவையில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்க ராகுல் வலியுறுத்தல்
10 Mar 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : அவசர அவசரமாக தரையிறக்கம்
10 Mar 2025டெல்லி : அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
திருவள்ளூரில் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம்
10 Mar 2025திருவள்ளூர் : தமிழகத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தி.மு.க. வினர் போராட்டம்
10 Mar 2025சென்னை, தி.மு.க. எம்.பி.க்கள் பற்றி தவறாகப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதனுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.