எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (அக்.9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் பிரச்சினையில், தமிழக முதல்வர் தனிப்பட்ட கவனம் செலுத்தி, ஒரு அமைச்சர் குழுவை அமைத்தார். குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் ஆகியோர் அந்த குழுவில் நியமித்திருந்தார். அமைச்சர் குழுவும் இப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தொழிலாளர்களின் நலனை முக்கியமாக காக்க வேண்டும். அதேநேரத்தில் நமது மாநிலத்தில் இருக்கக்கூடிய படித்த இளைஞர்களுக்கு, அவர்கள் தொடர்ந்து சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற அக்கறையோடு அரசு இந்தப் பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்து அணுகி வருகிறது. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரக்கூடிய தொழிலாளர்களின் நலனைக் கருதி, தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பாக எடுக்கப்பட்டிருக்கக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் பயனாக, தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க சாம்சங் நிறுவனம் முன்வந்திருக்கிறது.
குறிப்பாக, தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஊதியத்தோடு, ஒவ்வொரு தொழிலாளிக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.5000, அக்டோபர் முதல் தேதியில் இருந்து கூடுதலாக வழங்கப்படும். அதேபோல், பணிக்காலத்தில், தொழிலாளி ஒருவர் இறக்க நேரிட்டால், அத்தொழிலாளியின் குடும்பத்துக்கு சிறப்பு உடனடி நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். அனைத்து தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட பேருந்து வசதிகள் உருவாக்கித் தரப்படும். தொழிலாளர்களுக்கு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்படும்.
தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய விடுப்புடன் கூடுதலாக, குடும்ப நிகழ்வு விடுமுறை வழங்கப்படும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி சாம்சங் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வந்த தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில், ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவனத்தில் இருக்கக்கூடிய சிஐடியூ அமைப்பு தங்களது கோரிக்கையை முன்வைத்து ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் தற்போது நடந்துகொண்டு வர நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வழக்கின் முடிவு அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை நிச்சயமாக, கட்டாயமாக அதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலை சிஐடியூ அமைப்பு தொடர்பாக, தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொழிலாளர் நலத்துறை நிச்சயமாக நிறைவேற்றும். சிஐடியூ அமைப்புக்கு இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், அத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன், தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சிஐடியூ அமைப்பு இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்
அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் எப்போதும்போல காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதே போலதான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை. தொழிலாளர்களின் நலனும் முக்கியம். இளைஞர்களின் வேலைவாய்ப்பு அரசுக்கு முக்கியம். போராடும் தொழிலாளர்களை விரோதமாக பார்க்கவில்லை. அடக்குமுறை நடக்கவில்லை. போராட்டத்தை அரசியலாக பார்க்கவில்லை. சி.ஐ.டி.யு.க்கும் அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
உதவி வேளாண்மை அலுவலர்கள் 83 பேருக்கு பணி நியமன ஆணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
09 Oct 2024சென்னை : 83 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
-
அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் குடும்ப நல நிதியுதவி : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
09 Oct 2024சென்னை : அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
ரூ. 22.69 கோடியில் 25 தாழ்தள பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
09 Oct 2024சென்னை : மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கென கொள்முதல் செய்யப்பட்ட 25 தாழ்தள பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஜெர்மன் துணைத் தூதர் மைக்கேலா குச்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-10-2024.
09 Oct 2024 -
கூட்டுறவு சங்கங்களில் 2 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
09 Oct 2024சென்னை : கூட்டுறவு சங்கங்களில் உள்ள 2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
09 Oct 2024சென்னை : தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி ஜிப்மரை தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
09 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரியில் ஜிப்மரைத் தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
-
வேறு மாநிலத்திற்கு இடம் மாறுகிறதா சாம்சங் நிறுவனம்? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
09 Oct 2024சென்னை : சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
09 Oct 2024சென்னை : ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு
09 Oct 2024மும்பை : ஜாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள்: அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி
09 Oct 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
-
ஜப்பானில் நாடாளுமன்றம் கலைப்பு: பிரதமர் ஷிகெரு இஷிபா உத்தரவு : வரும் 27-ம் தேதி தேர்தல் நடக்கிறது
09 Oct 2024டோக்கியோ : ஜப்பானில் நாடாளுமன்றத்தை (கீழ்சபை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
-
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வெண்ணி காலாடி-குயிலி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Oct 2024சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவன் படை தளபதி வெண்ணி காலாடி, சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட
-
நாட்டை விட்டு வெளியேற பின்லேடன் மகனுக்கு பிரான்ஸ் அரசு உத்தரவு
09 Oct 2024பாரிஸ் : பின்லேடன் மகன் உமர் பின்லேடன், உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்திற்கான சூழலை கண்காணிப்போம்: அமெரிக்கா
09 Oct 2024வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மத சுதந்திர சூழ்நிலையை உன்னிப்பாக கவனிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று லாவோஸ் பயணம்
09 Oct 2024புதுடெல்லி : ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று லாவோஸ் செல்கிறார்.
-
டுவிட்டர் தளத்திற்கான தடையை நீக்கியது பிரேசில்
09 Oct 2024பிரேசிலியா : பிரேசிலில் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு டுவிட்டர் வலைதளம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
-
அரியானா மாநில முதல்வராக வரும் 12-ம் தேதி பதவியேற்கிறார் சைனி
09 Oct 2024சண்டிகர் : அரியானா மாநில முதல்வராக வரும் 12-ம் தேதி நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் 74 சதுர அடி சிறையில் அடைப்பு
09 Oct 2024சிங்கப்பூர் : பரிசுகள் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன், 74 சதுர அடி அளவுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
அரியானா தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: ராகுல்
09 Oct 2024புதுடெல்லி : அரியானா தேர்தலில் கிடைத்த எதிர்பாராத முடிவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ரஜினியின் வேட்டையன் பட சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
09 Oct 2024சென்னை : ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
2024-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
09 Oct 2024ஸ்டாக்ஹோம் : 2024-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் புகழாரம்
09 Oct 2024சென்னை : இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவுச் சின்னங்களும் வரலாறும் அவர் முன்னெடுத்த உரிமைப்போரும் நமது சமூகநீதி முயற்சிகளுக்கு என்றும் ஊக்கமளிக்கட்ட
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி
09 Oct 2024புதுடெல்லி : ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.
-
சாம்சங் தொழிலாளர் பிரச்சனை: அரசுக்கு எடப்பாடி கோரிக்கை
09 Oct 2024சென்னை : சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.