எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால், மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா. இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அம்பேத்கருக்கு அவதூறு. இதுதான் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் ஆகும்.” என்றும் அவர் விமர்சித்துள்ளார். தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகளைப் பாராட்டியும், கூட்டத்தொடர் முழுவதும் பா.ஜ.க. அவையை முடக்கியதாகவும் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,“தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் - தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையின் விவரம் வருமாறு., இந்திய பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள்.
தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது - மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள். மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக கழக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து - நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.
தி.மு.க. எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள் - நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்சினைகளில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது. அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் என, தான் பொறுப்பேற்று பதில் சொல்லியே ஆகவேண்டிய அனைத்திலும் கனத்த மவுனம் காக்கும் பிரதமர் பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வினரால் ஜனநாயகம் படாத பாடு பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவையை நடத்த விரும்புவதை விட- அவையை முடக்க வேண்டும், அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதையே மனதில் வைத்து பா.ஜ.க. எம்.பி.க்கள் செயல்பட்டதை நாம் காணமுடிந்தது. ஆக்கப்பூர்வமான விவாதம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது பாராளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் அரிதான நிகழ்வாக பா.ஜ.க. ஆட்சியில் மாறி விட்டதை எண்ணி ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாம் தி.மு.க. கவலை கொள்கிறது.
குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து பாராளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மக்களவையானது 54.5 விழுக்காடும், மாநிலங்களவை 40 விழுக்காடும்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிட வேதனையான செய்தி இருக்க முடியுமா?
நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது – பா.ஜ.க. ஆட்சியின் கையில் “பாராளுமன்ற ஜனநாயகம்” எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிரகாலக் கூட்டத்தொடரே சாட்சி. அரசியல்சட்டத்தின் 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது – அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்து - இழிவுபடுத்திப் பேசுவது பா.ஜ.க.வின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது. ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா - இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு! இதுதான் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் ஆகும்.
இவ்வளவு களேபரத்திலும் – தி.மு.க. மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற தவறவில்லை என்பது - இவர்கள் கலைஞர் வளர்த்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட திராவிட இயக்க ஆற்றலாளர்கள் என்பதை அரங்கேற்றியுள்ளது.
“ஒரே நாடு ஒரே தேர்தலை” கடுமையாக எதிர்த்துப் பேசிய தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு - “மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்யுங்கள்” என்றும் “பேரிடர் மேலாண்மை 2024 திருத்தச் சட்டத்தை எதிர்த்தும்” அனல் பறக்கப் பேசிய தி.மு.க. பாராளுமன்றக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி - “அவைக்குப் பிரதமரே வருவதில்லை” என்று முழங்கிய திருச்சி சிவா - அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டில், “அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறு கட்டமைப்புக் கூறுகளும் - கேசவானந்த பாரதி வழக்கும்” என அரசியல்சட்ட நுணுக்கம் நிறைந்த ஆ.இராசா - மாநில உரிமைகளைப் பற்றியும், மதவாத அரசியல் அச்சுறுத்தல் குறித்தும் உரையாற்றிய ஜெகத்ரட்சகன் - “வானிலை அறிவிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துக” என தயாநிதி மாறன் - என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மத்திய அரசைத் தட்டிஎழுப்பினார்கள்.
தமிழ்நாடு நலன் சார்ந்த - நம் நாட்டு நலன் சார்ந்த பேச்சுக்களை நான் மட்டுமல்ல நாடே கைதட்டி இப்படியல்லவா பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனப் பாராட்டி வருகிறது. குளிர்காலக் கூட்டத்தொடரில் மட்டும் நம் எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமாக எழுப்பிய அடுக்கடுக்கான திட்டங்கள் பற்றி இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன்.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை, ரயில்வே திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு, > சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது, விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரிக்கை, விவசாயிகளுக்கான பி-எம். கிசான் திட்டத்தின்கீழ் போதிய நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துதல், சுங்கச்சாவடிகளை ஒழித்தல், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, நீதித்துறையில் பன்முகத்தன்மை கோரிக்கை, சிறுபான்மையினர் பொருளாதாரத் திட்டங்கள் பற்றிய கோரிக்கை, சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராளுமன்றக் கண்டனத் தீர்மானம், நீட் தேர்வு முறைகேடுகள், வக்ப் வாரிய சட்டத் திருத்த எதிர்ப்பு, தமிழ்நாட்டின் விமான நிலையத் திட்டங்கள், இந்திய - சீன எல்லைப் பிரச்சினை பற்றி வெள்ளை அறிக்கை கோரியது, சென்னை-தூத்துக்குடி வந்தே பாரத், பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்காதது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை, மதுரை எய்ம்ஸ், நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி - தினக் கூலியையும் உயர்த்துவது, அகழ்வாராய்ச்சிக்குத் தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை, இப்படி எண்ணற்ற திட்டங்களை - தமிழ்நாட்டின் உரிமைகளை - எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும் – தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய கழக எம்.பி.க்கள் எழுப்பியது எழுச்சியூட்டியது.
அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் தி.மு.க.வின் தலைவர் என்ற நிலையில் நம் எம்.பி.க்களின் சாதனைகளை மார்தட்டி அறிவித்துக்கொள்ள வேண்டியது முக்கியம் என்றே கருதுகிறேன்.
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாகக் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் - எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள் – ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தலை” ஆணித்தரமாக எதிர்த்த பாராளுமன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை – தமிழ்நாட்டு மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்கள் நமது எம்.பி.க்கள்! இனியும் மத்திய அரசு திருந்தவில்லை என்றால் - தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் - தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி!. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
கரூரில் ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவி கடத்தல்; மர்ம நபருக்கு வலைவீச்சு
10 Mar 2025கரூர் : கரூரில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற மர்ம நபர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
-
சுனிதா வில்லியம்ஸ் வரும் 16-ம் தேதி பூமிக்குதிரும்புகிறார்: நாசா அறிவிப்பு
10 Mar 2025வாஷிங்டன், விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதியை நாசா அறிவித்துள்ளது.
-
தமிழர்கள் குறித்த பேச்சுக்கு கனிமொழி எதிர்ப்பு: எனது வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருத்தம்
10 Mar 2025புதுடெல்லி : தமிழக அரசை, தமிழக எம்.பி.,க்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறினேன் என்று கனிமொழி கூறினார். நான் அவ்வாறு கூறவில்லை.
-
தூத்துக்குடி அருகே ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
10 Mar 2025தூத்துக்குடி : ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அமைதியை நிலைநாட்டுவோம்: சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் அதிபர்
10 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் அமைதியை நிலை நாட்டுவோம் என்று அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
கராச்சியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலி
10 Mar 2025கராச்சி, கராச்சியில் ஆப்கானியர்கள் தங்கியுள்ள முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.
-
பார்லி. மக்களவையில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்க ராகுல் வலியுறுத்தல்
10 Mar 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: கனிமொழி
10 Mar 2025புதுடெல்லி, மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்" என்று கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-03-2025.
10 Mar 2025 -
நடிகை ரன்யா ராவுக்கு அரசு நிலம்: காங்கிரஸ் அமைச்சருக்கு தொடர்பா? கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு
10 Mar 2025பெங்களூரு, தங்கம் கடத்தல் வழக்கில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.
-
நெல்லை, குமரி உள்பட தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை
10 Mar 2025சென்னை, தமிழகத்தில் மார்ச் 11 ஆம் தேதி (இன்று) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கச்சத்தீவு திருவிழா: படகுகளை இன்று ஆய்வு செய்யும் மீன்துறை அதிகாரிகள்
10 Mar 2025சென்னை : கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் குறித்து மீன்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்கின்றனர்.
-
தனுஷ்-நயன்தாரா வழக்கு விசாரணை: ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
10 Mar 2025சென்னை, தனுஷ்-நயன்தாரா வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு
10 Mar 2025சென்னை : லண்டனில் தனது முதல் சிம்பொனி அரங்கேற்றத்துக்பின் திங்கள்கிழமை சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்நிறுவு திறன் மேலும் அதிகரிப்பு
10 Mar 2025சென்னை : தமிழகத்தில் கடந்த 2023-24-ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகா வாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.
-
மணிப்பூரில் 12 கிளர்ச்சியாளர்கள் கைது
10 Mar 2025இம்பால் : மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட ஆயுதக்குழுக்களை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
-
தமிழக எம்.பி.க்களை அநாகரிகமானவர்கள் என்பதா? - மத்திய கல்வி அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
10 Mar 2025சென்னை : நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
-
போரூர் ஏரியில் மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய ஆண் சடலம்..!
10 Mar 2025சென்னை : போரூர் ஏரியில் மீனுக்கு விரித்த வலையில் ஆண் சடலம் சிக்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தது தி.மு.க.
10 Mar 2025புதுடெல்லி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களவையில் தி.மு.க. சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
-
பார்லி. மக்களவையில் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்க ராகுல் வலியுறுத்தல்
10 Mar 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழந்து விபத்து
10 Mar 2025அமெரிக்கா, அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
-
தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுப்பு: தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளி; பார்லி. மக்களவை ஒத்திவைப்பு
10 Mar 2025புதுடெல்லி : தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கடும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
-
தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்: கோலி
10 Mar 2025துபாய் : கடந்த கால ஐ.சி.சி. நாக் அவுட் தோல்விகளிலிருந்து இந்திய அணி நிறைய கற்றுக்கொண்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
-
7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி: பா.ம.க. நிழல் நிதி அறிக்கை வெளியீடு
10 Mar 2025விழுப்புரம் : அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று பாமக நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருவள்ளூரில் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம்
10 Mar 2025திருவள்ளூர் : தமிழகத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.