எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கெனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தர்மேந்திர பிரதான் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டார். அதில், 2018 - 19 கல்வியாண்டில் 65.87 லட்சம் மாணவர்கள் தமிழ் வழிக் கல்வி கற்ற நிலையில், 2023-24 கல்வியாண்டில் 19.05 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ”தற்போது 67 சதவிகிதம் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியை கற்றுவருவதாகவும் தமிழ் வழிக் கல்விமுறை 54 சதவிகிதத்தில் இருந்து 36 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆங்கில வழிக் கல்வியானது கடந்த 5 ஆண்டுகளில் 3.4 லட்சத்தில் இருந்து 17.7 லட்சமாக அதிகரித்துள்ளது. 5 மடங்கு உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:- மாநில கல்வி முறை உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தொடர்ந்து சிறந்த முடிவுகளை கொடுத்துள்ளது. மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக புரிதல் அடிப்படையிலான கற்றலில் கவனம் செலுத்தியதன் வெளிப்பாடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தொழில்துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். 58,779 பள்ளிகளில் 1.09 கோடி மாணவர்கள் மாநில வாரியப் பாடத்திட்டத்தின் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆனால், 1635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.
எனவே, தமிழக மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது மிகவும் தெளிவாகிறது. சிலர் கூறுவது போல், மூன்றாம் மொழியைக் கற்பதற்கான தேவை இருந்திருந்தால், நம் மக்கள் ஏன் தொடர்ந்து மாநில வாரியப் பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள்? மக்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு மதிப்போம். தமிழ்நாட்டின் இருமொழிக் கல்வியில் ஆங்கிலம் ஏற்னெனவே உள்ளது. மாணவர்கள் உலகளாவிய வாய்ப்புகளைப் பெறுவதை ஆங்கிலம் உறுதி செய்கிறது.
ஆங்கில வழிப் பள்ளிகளில்கூட, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தமிழை ஒரு பாடமாகப் படித்து அதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமது பெருமைக்கான தமிழ், உலக வழிகாட்டியாக ஆங்கிலம் நமது முன்னேற்றம் மற்றும் சமத்துவத்திற்கான பாதையாக உள்ளது. எனவே, மாணவர்கள் ஏற்கெனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை. தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கெனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? என்று அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாடு தனது மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் சமரசம் செய்யாது. சிறப்பை வழங்கும் ஒரு அமைப்பை சீர்குலைக்க வேண்டாம். எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-03-2025.
12 Mar 2025 -
வரும் 18-ம் தேதி தமிழக அனைத்துக்கட்சி கூட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு
12 Mar 2025சென்னை : தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக வரும் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்ப
-
பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பில் 16 தீவிரவாதிகள் சுட்டு கொலை
12 Mar 2025பாகிஸ்தான் : ரயில் சிறைப்பிடிப்பு விவகாரத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
ரஷ்யா-உக்ரைன் இடையே 30 நாட்கள் போர்நிறுத்தம் : பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள்
12 Mar 2025ரஷியா : ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
-
நாளை முதல் 2 நாட்கள் நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் 8,000 பேர் பங்கேற்பு
12 Mar 2025ராமேஸ்வரம் : இந்திய - இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14, மார்ச் 15 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறகிறது.
-
3 நாட்கள் பயணமாக அமித்ஷா அசாம் செல்கிறார்
12 Mar 2025புதுடெல்லி : 3 நாள் பயணமாக அசாம் செல்லும் அமித்ஷா அஙகு ஏபிஎஸ்யு-வின் 57வது மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
-
மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த ஆயிரம் பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கியது அரசு
12 Mar 2025சென்னை : மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.
-
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கில் பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது
12 Mar 2025விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச் சாலையில் பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை ஆட்சியர் பழன
-
மும்மொழிக் கொள்கையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து
12 Mar 2025மதுரை : மும்மொழிக் கொள்கையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
-
மியான்மர் சைபர் மோசடியில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு
12 Mar 2025புதுடெல்லி : மியான்மர் - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள், 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக வெள
-
அரியானா உள்ளாட்சி தேர்தல்: பாரதிய ஜனதா அபார வெற்றி
12 Mar 2025சண்டிகர் : அரியானா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது.
-
தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழகத்தின் நிலைபாட்டுக்கு கர்நாடகா முதல்வர் ஆதரவு : அமைச்சர் பொன்முடி பேட்டி
12 Mar 2025பெங்களூரு : கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசு தகவல்
12 Mar 2025சென்னை : கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தொகுதி மறுவரையறை ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டம்: ஆந்திரா, கர்நாடகா கட்சிகளுக்கு தமிழ்நாடு குழு நேரில் அழைப்பு : அமைச்சர்கள் குழு சந்தித்து அழைப்பு விடுத்தது
12 Mar 2025புதுடெல்லி : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.
-
வேங்கைவயல் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
12 Mar 2025புதுக்கோட்டை, புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப
-
தி.மு.க. புதிய மாணவரணி செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் நியமனம் துரைமுருகன் அறிவிப்பு
12 Mar 2025சென்னை தி.மு.க.வின் புதிய மாணவரணி செயலாளர், கொள்கை பரப்பு செயலாளரை நியமனம் செய்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
சென்னையில் தூய்மை பணிகளுக்கு புதிதாக 30 வாகனங்களை மேயர் துவக்கி வைத்தார்
12 Mar 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிகளுக்காக 30 வாகனங்களை மேயர் பிரியா கொடியசைத்துத்
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Mar 2025சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 13 முதல் மார்ச் 18 வரையிலான 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்
-
இருமொழிக் கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது: கல்வி முறையில் மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்? - மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
12 Mar 2025சென்னை : தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கெனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்?
-
எலான் மஸ்க் நிறுவனத்துடன் ஜியோ நிறுவனம் ஒப்பந்தம்
12 Mar 2025அமெரிக்கா, ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ நிறுவனமும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளது.
-
மனித உரிமை மீறல் குற்றம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது
12 Mar 2025மணிலா, பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்த்தே. இவர் 2016 முதல் 2022 வரை பிலிப்பைன்ஸ் அதிபராக செயல்பட்டார்.
-
எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து குடியரசு துணைத்தலைவர் டிஸ்சார்ஜ்
12 Mar 2025டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) நேற்று காலை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம் கேரள உயர்கல்வித் துறை மந்திரி பேட்டி
12 Mar 2025திருவனந்தபுரம், மும்மொழிக் கொள்கை விஷயத்தில் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - மொரீசியஸ் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
12 Mar 2025போர்ட் லூயிஸ் : பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் முன்னிலையில், மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் 8 ஒப்பந்தங்கள் இன்று உறுதி செய்யப்பட்ட
-
டெஸ்லா காரை வாங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
12 Mar 2025அமெரிக்க : டெஸ்லா காரை அமெரிக்க அதிபர் டிரம்ப் வாங்கியுள்ளார். அந்த காருடன் எலான் மஸ்க்- டிரம்ப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.