எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிகளுக்காக 30 வாகனங்களை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து முழுவதுமாக சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடும் வகையில் அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் வகையில் டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 159 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, கட்டடக் கழிவுகள் அகற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள பேருந்து சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 925 எண்ணிக்கையிலான பேருந்து நிழற்குடைகள் மற்றும் 173 எண்ணிக்கையிலான நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணிக்காக முதற்கட்டமாக மண்டலத்திற்கு இரண்டு வாகனங்கள் என்ற அடிப்படையில் உயர்அழுத்த பம்புகள் மற்றும் தண்ணீர் தொட்டி பொருத்தப்பட்ட 30 எண்ணிக்கையிலான வாகனங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீரினை பயன்படுத்தி நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் தூய்மைப் பணிக்காக சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் கழிவுநீரினை மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பாதசாரிகள் முழுமையான பாதுகாப்புடன் நடைபாதைகளை பயன்படுத்துகின்ற வகையிலும், பயணிகளின் வசதியினை மேம்படுத்துகின்ற வகையிலும் பேருந்து நிறுத்தங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் தூய்மையாகப் பராமரித்திடும் வகையில் சுழற்சி முறையில் நீர் தெளித்து சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்கும் வகையில் 30 எண்ணிக்கையிலான வாகனங்கள் மூலம் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகரினை தூய்மையாக வைப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் தூய்மைப் பணி நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார்,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம் டாக்டர் கோ. சாந்தகுமாரி, தலைமைப் பொறியாளர் (பொது) திரு.கே.விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
சிறந்த ஒருநாள் இந்திய அணியை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்
11 Mar 2025மும்பை : இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
-
டெல்லி அணி கேப்டன் பதவியை நிராகரித்தார் கே.எல். ராகுல்?
11 Mar 2025புதுடில்லி : டெல்லி அணியின் கேப்டன் பதவியை கே.எல். ராகுல் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.எல். ராகுல்...
-
சஸ்பெண்ட்டை ரத்து செய்த விளையாட்டு அமைச்சகம்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு போட்டிகளை நடத்த அனுமதி
11 Mar 2025புதுடெல்லி : இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நேற்று (மார்ச் 11) ரத்து செய்துள்ளது.
-
ரவீந்திர ஜடேஜா 'கம்பேக்கை' புஷ்பா பட பாணியில் அறிவித்த சி.எஸ்.கே. நிர்வாகம்
11 Mar 2025சென்னை : ஜடேஜா அணியில் இணைந்ததை 'புஷ்பா' பட ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு சி.எஸ்.கே.நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டி...
-
இந்தியன் வெல்ஸ் ஓபன்: அல்காரஸ், சபலென்கா 4-வது சுற்றுக்கு தகதி
11 Mar 2025இந்தியன்வெல்ஸ் : இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றுக்கு அல்காரஸ், சபலென்கா, கோகோ காப் முன்னேறினர்.
-
இந்திய அணிக்கு பாராட்டு
11 Mar 2025துபாய்க்கு உலக லெவனை கூட்டி சென்றாலும் இந்திய அணி எளிதில் வீழ்த்தி விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர ஷாகீத் அப்ரிடி பாராட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-03-2025.
12 Mar 2025 -
150-வது ஆண்டையொட்டி ஆஸி.- இங்கி. இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்த திட்டம்
11 Mar 2025மெல்போர்ன் : ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதையொட்டி சிறப்பு டெஸ்ட் போட்டி வருகிற 2027-ம் ஆண்ட
-
பாகிஸ்தான் தொடருக்கான நியூசி. அணியில் முக்கிய வீரர்கள் இல்லை
11 Mar 2025கிறிஸ்ட்சர்ச் : பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை
-
வரும் 18-ம் தேதி தமிழக அனைத்துக்கட்சி கூட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு
12 Mar 2025சென்னை : தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக வரும் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்ப
-
சஸ்பெண்ட்டை ரத்து செய்த விளையாட்டு அமைச்சகம்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு போட்டிகளை நடத்த அனுமதி
11 Mar 2025புதுடெல்லி : இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நேற்று (மார்ச் 11) ரத்து செய்துள்ளது.
-
பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பில் 16 தீவிரவாதிகள் சுட்டு கொலை
12 Mar 2025பாகிஸ்தான் : ரயில் சிறைப்பிடிப்பு விவகாரத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
3 நாட்கள் பயணமாக அமித்ஷா அசாம் செல்கிறார்
12 Mar 2025புதுடெல்லி : 3 நாள் பயணமாக அசாம் செல்லும் அமித்ஷா அஙகு ஏபிஎஸ்யு-வின் 57வது மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
-
மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த ஆயிரம் பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கியது அரசு
12 Mar 2025சென்னை : மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.
-
மும்மொழிக் கொள்கையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து
12 Mar 2025மதுரை : மும்மொழிக் கொள்கையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
-
அரியானா உள்ளாட்சி தேர்தல்: பாரதிய ஜனதா அபார வெற்றி
12 Mar 2025சண்டிகர் : அரியானா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது.
-
நாளை முதல் 2 நாட்கள் நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் 8,000 பேர் பங்கேற்பு
12 Mar 2025ராமேஸ்வரம் : இந்திய - இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14, மார்ச் 15 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறகிறது.
-
ரஷ்யா-உக்ரைன் இடையே 30 நாட்கள் போர்நிறுத்தம் : பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள்
12 Mar 2025ரஷியா : ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
-
தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழகத்தின் நிலைபாட்டுக்கு கர்நாடகா முதல்வர் ஆதரவு : அமைச்சர் பொன்முடி பேட்டி
12 Mar 2025பெங்களூரு : கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கில் பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது
12 Mar 2025விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச் சாலையில் பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை ஆட்சியர் பழன
-
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசு தகவல்
12 Mar 2025சென்னை : கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சைபர் மோசடியில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு
12 Mar 2025புதுடெல்லி : மியான்மர் - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள், 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக வெள
-
வேங்கைவயல் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
12 Mar 2025புதுக்கோட்டை, புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப
-
தொகுதி மறுவரையறை ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டம்: ஆந்திரா, கர்நாடகா கட்சிகளுக்கு தமிழ்நாடு குழு நேரில் அழைப்பு : அமைச்சர்கள் குழு சந்தித்து அழைப்பு விடுத்தது
12 Mar 2025புதுடெல்லி : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.
-
சென்னையில் தூய்மை பணிகளுக்கு புதிதாக 30 வாகனங்களை மேயர் துவக்கி வைத்தார்
12 Mar 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிகளுக்காக 30 வாகனங்களை மேயர் பிரியா கொடியசைத்துத்