எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக சுமார் 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்துவரும் சூழலில் அ.தி.மு.க. எம்எல்ஏ.,க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொண்டு வந்துள்ள சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவி நீக்க கோரிக்கை தி.மு.க. அரசு விவாதத்துக்கு எடுக்க மறுத்துவிட்டனர்.
அதேபோல், கடந்த ஒருவார காலமாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களிலும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் விநியோகம் செய்யும் மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விசாரணை முடியும்போது, இந்த டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக சுமார், கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த அரசு அதுகுறித்து இதுவரை இன்னும் எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை. அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அந்த சோதனை மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக அறிவித்த பிறகும், இந்த அரசு எந்த செய்தியும் வெளியிடாத காரணத்தால், இதற்கு தார்மீக பொறுப்பேற்று இந்த தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிதிநிலை அறிக்கை தொடர்பான கேள்விக்கு, “முழுமையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபிறகு அதுகுறித்து கருத்துகளை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-03-2025.
14 Mar 2025 -
தமிழகத்தில் 10 புதிய கலை கல்லூரிகள்: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு
14 Mar 2025சென்னை, தமிழகத்தின் 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்,” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: சட்டசபையில் வரும் 17-ம் தேதி வாக்கெடுப்பு
14 Mar 2025சென்னை, அ.தி.மு.க. கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து (17-ம் தேதி) திங்கட்கிழமை விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
14 Mar 2025சென்னை, ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
-
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சனை: அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
14 Mar 2025சென்னை, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது” என்று&n
-
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட முடிவு
14 Mar 2025சென்னை, “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2025-26-ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்,” என்று தம
-
கருணாநிதி நினைவிடத்தில் தங்கம் தென்னரசு மரியாதை
14 Mar 2025சென்னை, 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேரில் சென்று
-
மத்திய அரசால் தமிழக நிதி நிலை பாதிப்பு: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விவரிப்பு
14 Mar 2025சென்னை, “மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும், பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு சொற்பமான நிதி விடுவித்ததும் மாநில அரசின் நிதி நி
-
தமிழகத்தின் கடன் ரூ.9 லட்சம் கோடியாக மேலும் அதிகரிப்பு
14 Mar 2025சென்னை, கடந்த ஆண்டு ரூ.8 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது மேலும் 1 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.
-
ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்தை நெருங்கியது: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
14 Mar 2025சென்னை, சென்னையில் நேற்று தங்கம் விலை பவுன் ரூ.65,800-ஐ கடந்து மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
14 Mar 20251) 6,100 கி.மீ. நீளமுள்ள கிராம சாலைகள் ரூ.2,100 கோடியில் மேம்படுத்தப்படும்.
-
டாஸ்மாக்கில் பெரும் ஊழல்: எடப்பாடி பழனிசாமி பகீர்
14 Mar 2025சென்னை, டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக சுமார் 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்
14 Mar 2025சென்னை ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம், ஒசூர், விருதுநகரில் புதிய டைடல் பூங்கா, மதுரை, கடலூரில் காலணி தொழிற்பூங்கா, 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட
-
சென்னையில் 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு
14 Mar 2025சென்னை, பருவநிலை மாற்றத்திலிருந்து மீட்கும் தன்மையுடைய ஏழு மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள் சென்னையில் ரூ.
-
சென்னை, கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவைகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
14 Mar 2025சென்னை, சென்னை, கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் வேகமாக நட
-
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
14 Mar 2025சென்னை, 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் பங்கு கு
-
மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
14 Mar 2025மும்பை : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக்கில் அரையிறுதியில் இந்திய அணி ஆஸியை வீழ்த்தியது.
இந்திய அணி வெற்றி...
-
தொகுதி மறுவரையறை கூட்டம்: கேரள முதல்வருக்கு தி.மு.க. நேரில் அழைப்பு
14 Mar 2025திருவனந்தபுரம், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு தி.மு.க.&
-
ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: அதிபர் டிரம்பிற்கு பின்னடைவு
14 Mar 2025வாஷிங்டன் : ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பாக அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அறிவிப்பு
14 Mar 2025டாக்கா : 2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
-
5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் தங்கம் தென்னரசு
14 Mar 2025சென்னை, 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
பணிப்பெண்கள் மீது பயணி தாக்குதல்: அமெரிக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
14 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் சவன்னா விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.
-
டாஸ்மாக்கில் முறைகேடு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
14 Mar 2025சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு என்ற அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்
-
குஜராத்தில் பயங்கரம்: குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து - 3 பேர் பலி
14 Mar 2025காந்திநகர் : குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
-
மக்களை மறந்த தமிழக அரசு பட்ஜெட்: த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம்
14 Mar 2025சென்னை, தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு என்று த.வெ.க.