எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெகுசராய், பீகார் இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பீகாரில் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய பொறுப்பாளர் கன்னையா குமாரின் தலைமையில் பெகுசராய் நகரில் பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி ஊர்வலமாகச் சென்றார். முன்னதாக இந்த பேரணி குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட ராகுல் காந்தி, "வேலையின்மை, பணவீக்கம், வினாத்தாள் கசிவு, அரசு வேலைகள் குறைப்பு, உங்களுக்குப் பயனளிக்காத தனியார்மயமாக்கல் போன்ற பிரச்சினைகள்தான் நாங்கள் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள்.
பீகார் இளைஞர்களின் உணர்ச்சிகளை உலகம் காணவும், மாநில அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் வெள்ளை டி-சர்ட் அணிந்து எங்களுடன் சேருங்கள். பீகார் இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம். பீகார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே எங்கள் பயணத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேரணி குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “அவர் (ராகுல் காந்தி) பேரணி செல்வதற்குப் பதிலாகப் பிராயச்சித்தம் தேட வேண்டும். நரேந்திர மோடி அரசு 25 கோடி ஏழை மக்களை வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்த்தியுள்ளது. பெகுசராயில், அவரது தந்தை(ராஜீவ் காந்தி) 1985 ஆம் ஆண்டு பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையைத் திறப்பதாகக் கூறினார், ஆனால் எதுவும் நடக்கவில்லை. பீகாரில் பிரதமர் நரேந்திர மோடியின் சாலைகளையும் நிதிஷ் குமாரின் வளர்ச்சியையும் பார்க்கும்போது அவரது கண்கள் மயங்கிப் போகும்.” என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-04-2025.
07 Apr 2025 -
மீ்ண்டும் இணைந்த பிரஷாந்த்-ஹரி கூட்டணி
07 Apr 2025நடிகர் பிரஷாந்தை வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய, தமிழ் என்ற படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரியது.
-
டெஸ்ட் விமர்சனம்
07 Apr 2025நட்சத்திர கிரிக்கெட் வீரரான சித்தார்தை அணியில் இருந்து நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கிறது. அதனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட அவரை வற்புறுத்துகிறது.
-
க.மு க.பி விமர்சனம்
07 Apr 2025காதலர்கள், திருமணத்துக்கு பிறகு சிறு சிறு பிரச்சனைகளைக்கூட கடக்க முடியாமல் விவாகரத்துக்கு சொல்லும் நிலையைச் சொல்லும் படம் தான் க.மு - க.பி.
-
இஎம்ஐ விமர்சனம்
07 Apr 2025மாத தவனைத் திட்டத்தின் (EMI) கீழ் பொருட்களை வாங்கியவர்கள் என்ன என்ன இன்னலுக்கு ஆளாகிறார்கள் என்பதை எச்சரிக்கையாக சொல்லும் படம் தான் இஎம்ஐ.
-
வக்பு சட்டம் தொடர்பாக அமளி: ஜம்மு-காஷ்மீர் சட்டசபை ஒத்திவைப்பு
07 Apr 2025ஜம்மு, வக்பு சட்டம் தொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க சபாநாயகர் மறுத்ததை அடுத்து, ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ
-
இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம்: ராகுல்
07 Apr 2025பெகுசராய், பீகார் இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
07 Apr 2025சென்னை, தமிழக சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.
-
அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது: இ.பி.எஸ். பதிலடி
07 Apr 2025சென்னை, அ.தி.மு.க. எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது. நான் மட்டுமல்ல அ.தி.மு.க.
-
தமிழக டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்
07 Apr 2025சென்னை, டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
-
இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சி
07 Apr 2025மும்பை : இந்திய பங்கு சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள: மம்தா
07 Apr 2025கொல்கத்தா, உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை இழக்க மாட்டார்கள் என்
-
வரி விதிப்பை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை : அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்
07 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஜப்பானில் விபத்து: 3 பேர் பலி
07 Apr 2025டோக்கியோ : ஜப்பானில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டாக்டர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலம்
07 Apr 2025திருவாரூர் : ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
-
ஹஜ் புனித யாத்திரை எதிரொலி: இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி தற்காலிகத்தடை
07 Apr 2025ரியாத் : இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி அரேவியா தற்காலிகம் தடை விதித்துள்ளது.
-
கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பா? - மத்திய அரசு பதில்
07 Apr 2025புது தில்லி : கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
-
5 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு
07 Apr 2025தருமபுரி : 5 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.