எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போல இந்தியா-இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 2 ஜாம்பவான்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:- பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக வந்துள்ள தகவல்கள் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த முடிவு இந்தியா-இங்கிலாந்து ஆகிய 2 கிரிக்கெட்டுக்கும் பட்டோடிகள் ஆற்றிய பங்களிப்பிற்கு முழுமையான பதில் உணர்த்திறன் இல்லாததைக் காட்டுகிறது. வேண்டுமானால் அந்தக் கோப்பையின் பெயரில் இங்கிலாந்து தங்கள் நாட்டின் ஒரு வீரர் பெயரை இணைத்துக் கொள்ளலாம். அதை இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஆனால் பட்டோடி வரலாறு மீண்டும் பேசப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
_____________________________________________________________________________________________
பா.ஜ.க.வில் இணைந்த ஜாதவ்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ் ஐ.பி.எல். சென்னை, பெங்களூரு அணிகளுக்கு விளையாடியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் சரியாக சோபிக்காத கேதர் ஜாதவ், கடந்தாண்டு அனைத்துவிதமான போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில், மும்பையில் மகாராஷ்டிர அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
இதுபற்றி ஜாதவ் கூறுகையில், “சத்ரபதி சிவாஜிக்கு தலைவணங்குகிறேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸின் தலைமையில் பா.ஜ.க. சிறப்பாக செயல்படுகிறது. அதனால், பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்” என்றார். இதற்கு முன்னதாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கௌதம் கம்பீர், இர்பான் பதான், முகமது அசாரூதின், நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோரின் வரிசையில் கேதர் ஜாதவ்வும் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
_____________________________________________________________________________________________
நியூசி., பயிற்சியாளர் விலகல்
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன் பின், அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டெட் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (டி20 மற்றும் ஒருநாள்) பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து கேரி ஸ்டெட் பேசியதாவது: பயிற்சியாளராக ஒவ்வொரு நாட்டுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனது எதிர்காலம் குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. கடந்த 6-7 மாதங்கள் மிகவும் பிஸியாக இருந்தது. எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும். பயிற்சியாளராக என்னால் தொடர்ந்து செயல்பட முடியும் என நினைக்கிறேன். ஆனால், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பயிற்சியாளராக செயல்பட விரும்பவில்லை என்றார்.
_____________________________________________________________________________________________
தாக்குரின் 100-வது ஐ.பி.எல்.
இந்த சீசனில் ஐ.பி.எல். ஏலத்தில் தேர்வாகாமல் இருந்து பின்னர் காயம் காரணமாக விலகியவருக்குப் பதிலாக மாற்று வீரராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சேர்ந்தார். லக்னோ அணியில் சிறப்பாக விளையாடி வரும் ஷர்துல் தாக்குர் தனது 100-ஆவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக சிறப்பு சீருடையை ஜாகீர் கானிடம் இருந்து பெற்றார்.
இதற்கு முன்பாக சிஎஸ்கே அணியில் விளையாடிய ஷர்துல் தாக்குர் இந்தியாவுக்கு டெஸ்ட் அணியில் முக்கியமான வீரராக இருக்கிறார். 100 ஐ.பி.எல். போட்டிகளில் 101 விக்கெட்டுகள் 315 ரன்கள் எடுத்துள்ளார். 138.15 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் ஷர்துல் தாக்குர் ஐ.பி.எல். தொடரில் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.
_____________________________________________________________________________________________
ரோகித் ஷர்மா ரியாக்ஷன்
ஐ.பி.எல். தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது. இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இப்போட்டியின்போது தன்னை தானே இம்பாக்ட் வீரர் ஆக ரோகித் சர்மா அறிவித்து கொண்டார். இம்பாக்ட் வீரர் உள்ளே வரும்போது நடுவர் கொடுக்க வேண்டிய சிக்னலை ரோகித் கொடுத்தார். ரோஹித் ஷர்மாவின் ரியாக்ஷன் இணையத்தில் வைரலானது.
_____________________________________________________________________________________________
ஒப்பந்த பட்டியல் வெளியீடு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை அறிவித்துள்ளது. 18 வீரர்கள் கொண்ட அந்த பட்டியலில் முன்னணி அதிரடி வீரரான ஹென்ரிச் கிளாசெனின் பெயர் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஹைபிரிட் ஒப்பந்தம் அடிப்படையில் டேவிட் மில்லர் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசெனை சேர்த்துள்ளது. இவர்கள் இருவரும் முக்கியமான இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. தொடர்களின்போது அணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியின் 18 வீரர்கள் கொண்ட ஒப்பந்த பட்டியல்:- டெம்பா பவுமா, டேவிட் பெடிங்ஹாம், நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், க்வேனா மபாகா, எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ். ஹைபிரிட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: டேவிட் மில்லர் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென். இந்த ஒப்பந்த காலம் வரும் ஜூன் மாதம் தொடங்கி 2026 மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனுக்கு 14 நாட்கள் காவல்
16 Apr 2025நெல்லை : அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 8-ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்
-
வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை..? - இந்து அறக்கட்டளை வாரியங்களில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
16 Apr 2025புதுடெல்லி : இந்து அறநிலையத்துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
-
கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் : 4 வாரங்கள் கெடு விதித்து ஐகோர்ட் உத்தரவு
16 Apr 2025சென்னை : கல்வி நிறுவன ஜாதிப் பெயர்களை 4 வாரத்திற்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஜாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என அனைத
-
இந்தியர்களை ஈர்க்க விசா சலுகைகளை அறிவித்த சீனா
16 Apr 2025டெல்லி : இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சீனா இந்த தளர்வை அறிவித்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
16 Apr 2025திருப்பதி : திருப்பதி கோவிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
மாலத்தீவுக்கு இஸ்ரேல் நாட்டினர் செல்ல தடை
16 Apr 2025டெல் அவிவ் : பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து மாலத்தீவு நடவடிக்கை சுற்றுலா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் தீவுகளில் ஒன்று மாலத்தீவு.
-
சீமானுக்கு எதிரான வழக்கு: மனுதாரருக்கு நீதிபதி கேள்வி
16 Apr 2025சென்னை : சீமானுக்கு எதிரான வழக்கில் மனுதாரருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக நடவடிக்கை
16 Apr 2025மும்பை : எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைத்து சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
-
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா..? - பதிலளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு
16 Apr 2025சென்னை : பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ரூ. 3 கோடி மதிப்பில் கலைஞர் திரைக்கருவூலம் அமைக்கப்படும் : அமைச்சர் சாமிநாதன் தகவல்
16 Apr 2025சென்னை : சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆா். திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ.
-
துபாயில் 2 இந்தியர்கள் வெட்டிக்கொலை
16 Apr 2025லாகூர் : துபாயில் 2 இந்தியர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பா.ஜ.க. தேசிய இளைஞர் பிரிவு தலைவராகிறாரா அண்ணாமலை?
16 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் பா.ஜ.க.
-
தமிழில் மட்டுமே இனி அரசாணை தமிழக அரசு புதிய உத்தரவு
16 Apr 2025சென்னை : தமிழில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சூறைகாற்றுடன் திடீர் கனமழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு
16 Apr 2025சென்னை : வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னையில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
-
தீவிரமடையும் வர்த்தகப்போர்: சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி விதித்து அமெரிக்கா பதிலடி
16 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்திய நிலையில் சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி விதித்த அமெரிக்கா பத
-
தர்பூசணி பழங்களில் ரசாயனம் இல்லை : தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தகவல்
16 Apr 2025சென்னை : தர்பூசணி பழங்களில் ரசாயனம் இல்லை என்று தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்
16 Apr 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
-
திபெத்தில் நிலநடுக்கம்
16 Apr 2025திபெத் : சீனாவில் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மாற்றுத்திறனாளிகளின் குரல் இனி உள்ளாட்சி மன்றங்களில் ஒலிக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
16 Apr 2025சென்னை : 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும். இதுதான் திராவிட மாடல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-04-2025
16 Apr 2025 -
புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகம்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
16 Apr 2025சென்னை : புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 Apr 2025சென்னை : தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் சவுதி அரசிடம் பேசி விரைவான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.&n
-
ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம்
16 Apr 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை: திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் போலீசில் புகார்
16 Apr 2025நெல்லை : இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்கா, 2 மாதங்களுக்கு முன் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவரை கரம் பிடித்த நிலையில், மகளுக்கு வரதட்சணை கொடுமை கொடுக்க
-
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்
16 Apr 2025சென்னை : மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உரையாற்றின