முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: தமிழக உயர்கல்வித்துறை விசாரணை

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      தமிழகம்
0

Source: provided

நெல்லை: மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்ததையொட்டி உயர்கல்வித்துறை விசாரணை நடத்த உள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்பை முடித்துவிட்டு, அங்கேயே தற்காலிக பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பி.எச்.டி. பட்டம் பெறுவதில் இருந்து தற்போது வரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒரு பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக, அந்த பேராசிரியை மாநில மகளிர் உரிமை ஆணையம் மற்றும் உயர்கல்வித்துறையிடம் கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து உயர்கல்வித்துறை மற்றும் மாநில மகளிர் உரிமை ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகார் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு பல்கலைக்கழக பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து