எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நாங்கள்இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள்அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் இங்கே ஆளமுடியாது. என்றும் இந்த முத்துவேல் கருணாநிதிஸ்டாலின் இருக்கும்வரை தமிழ்நாட்டை வேறு யாரும் ஆளமுடியாது என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில்நடைபெற்ற அரசு விழாவில்,முதல்வர் ஸ்டாலின் கலந்து திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டஉதவிகளை வழங்கி பேசியதாது:-
இப்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள் -பத்திரிகையிலும் படித்திருப்பீர்கள். விளிம்பு நிலை மக்களுக்குநம்முடைய அரசு அதிகாரம் வழங்குகிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற=அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள், தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக உறுப்பினராக ஒரு சட்டத்தைஅறிமுகப்படுத்தி இருக்கிறேன். இதனால், தமிழ்நாடு முழுவதும்உள்ளாட்சி அமைப்புகளில்,15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடைய குரல், ஒலிக்கப் போகிறது.
இதுபோல, நம்முடைய ஆட்சியில் தன்னம்பிக்கையும்,வளர்ந்திருக்கிறது! தமிழ்நாடும் வளர்ந்திருக்கிறது! இதைத்தான் சிலரால்,பொறுத்துக்கொள்ள முடியவில்லை! ஆட்சியின் மேல் நியாயமாக எந்தக்,குறையும் சொல்ல முடியாமல், இப்போது அவதூறு பரப்பிக் கொண்டுவருகிறார்கள். சட்டம் - ஒழுங்கு, அரசு நிர்வாகம் என்று அனைத்திலும்,தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. அனைத்துத் தரவுகள்தரவரிசைகளிலும் தெளிவாக இன்றைக்கு நாம் அதை பார்க்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற சில எதிர்க்கட்சிகள், பொறுப்பானஎதிர்க்கட்சிகளாக நடந்து கொள்ளாமல், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள்மாதிரி செயல்படுகிறார்கள். அவர்கள் எண்ணம் என்ன? தமிழ்நாட்டிற்கும்,தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்துடன்உறவாடி, தமிழ்நாட்டையே அடகு வைக்கவேண்டும். இதுதான் அந்த,சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணமாக இருக்கிறது! தி.மு.க.வைபொறுத்தவரைக்கும்நீட் தேர்வை எதிர்ப்பதாக இருந்தாலும் -மும்மொழித் திட்டத்தை நிராகரிப்பதாக இருந்தாலும் வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் -தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிப்படைகின்ற மாநிலங்களைன்று திரட்டுவதாக இருந்தாலும், நாம் தான் இந்திய அளவில்வலுவாக ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்! மாநிலஉரிமையின் அகில இந்திய முகமாக தி.மு.க.தான் இருக்கிறது.
சமீபத்தில், சென்னை வந்திருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர்அமித்ஷா நாம் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லாமல், திசைதிருப்புவதற்காக இதையெல்லாம் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றுபேசினார். அதாவது இதையெல்லாம் பேசி, நாம் திசை திருப்புகிறோம் என்றுஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாசொல்லிவிட்டுப்போயிருக்கிறார். நான் சொல்ல விரும்புவது, இந்தியாவில் இருக்கின்றஅனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது.மாநிலங்களின் உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும்செய்யாத காரணத்தினால் தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம்வரைக்கும் சென்று நாம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றோம்.
தி.மு.க-வின் ‘பவர்’ என்ன என்று தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல,இப்போது இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது.இதுதான் தி.மு.க-வின் பவர். உண்மை இப்படி இருக்கும்போது, திசை மாறி,சென்று கொண்டிருப்பவர்கள், திசை காட்டிகளாக இருக்கின்ற எங்களைபார்த்து திசை திருப்புகிறோம் என்று புலம்ப வேண்டாம்… நான்கேட்கிறேன்.. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாஅவர்களே… “நீட் தேர்வில் விலக்கு தருவோம்” என்று உங்களால் சொல்லமுடியுமா? “இந்தியை திணிக்க மாட்டோம்” என்று உங்களால் உறுதியளிக்க,முடியுமா? “தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம்”என்று பட்டியலிட முடியுமா? “தொகுதி மறுசீரமைப்பால், தமிழ்நாட்டின்பிரதிநிதித்துவம் குறையாது” என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா? நாங்கள் செய்வது திசைதிருப்புவது என்றால், இதற்கெல்லாம் தெளிவானபதிலை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் நீங்கள் கொடுக்கவில்லை.அடுத்து, சிறிது நாட்களுக்கு முன்னால், தமிழ்நாட்டுக்கு நம்முடையபிரதமர் இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரத்திற்கு வந்தார்கள், பாலத்தை திறந்து வைப்பதற்கு வந்தார்கள்.வரட்டும். அதை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், அங்கேஎன்ன பேசிவிட்டு போனார்? “எவ்வளவு கொடுத்தாலும் இங்கேஅழுகிறார்கள்” எவ்வளவு நிதி கொடுத்தாலும் நாம் அழுகிறோமாம் என்றுபேசிவிட்டுப் போயிருக்கிறார். நான் மிகுந்த அடக்கத்தோடு,மரியாதையோடு பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புவது,ஒன்றிய,அரசிடம்கையேந்தி நிற்க, மாநிலங்கள் பிச்சைக்காரர்களா என்ன?”யார் கேட்டது, நீங்கள் கேட்டது? அதனால் தான் நினைவுபடுத்துகிறேன். நீங்கள் பேசியது என்ன? குஜராத் முதலமைச்சராக. மோடி இருந்தபோது, ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம்,செய்கிறார்கள் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதிவழங்குவதில்பாரபட்சம் காட்டுகிறது என்று புகார் சொன்னார்.
யார் .மோடி. இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறார்கள் என்றசொல்வது எந்த வகையில் நியாயம்? நான் கேட்பது அழுகை இல்லை; அதுதமிழ்நாட்டின் உரிமை! நான் அழுது புலம்புவனும் இல்லை! ஊர்ந்து போய்யார் காலிலும் விழுகிறவனும் இல்லை. உறவுக்குக் கை கொடுப்போம் –உரிமைக்கு குரல் கொடுப்போம் – நமக்கு யார் கற்றுக் கொடுத்தது? – யார்,நமக்கு சொல்லிக் கொடுத்தது - கலைஞர்.அவருடைய வழித்தடத்தில் பயணிக்கின்றவன் நான்!அதற்கு அடையாளம்தான். இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாதவகையில், நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நாங்கள்அமைத்திருக்கின்ற மாநில சுயாட்சிக் குழு! எப்படி கலைஞர், ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று மாநில முதல்வர்கள் எல்லாம்தேசிய கொடியை ஏற்றுகின்ற உரிமையை அனைத்து மாநிலமுதல்வர்களுக்கும் பெற்றுத் தந்தாரோ, அதுபோல, இந்த குழுவின்மூலமாக அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமையையும் நாங்கள்பெற்றுத் தருவோம்!
மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால் தான், இங்கே உள்ளமக்களுக்குத் தேவையானவற்றை செய்ய முடியும். இதைத்தான் நான்சட்டமன்றத்தில் சொன்னேன், “ஒரு தாய்க்கு தான் தன் குழந்தைக்கு என்னதேவை என்று தெரியும். தன் குழந்தைக்கு என்ன கொடுக்கவேண்டும் என்றுஎங்கேயோ டெல்லியில் இருப்பவர்கள் தீர்மானித்தால், அந்த தாய் பொங்கிஎழுவாள்” என்று சட்டமன்றத்திலும் பதிவு செய்தேன்.ஒன்றிய பா.ஜ.க. அரசு எல்லா வகையிலேயும் நமக்கு தடையைஏற்படுத்துகிறார்கள். எப்படியெல்லாம் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு குடைச்சல்கொடுக்க முடியும் என்று யோசித்து அனைத்து ரூபத்திலேயும் அதைசெய்கிறார்கள். ஆனால், இது எல்லாவற்றையும் மீறி, ஒன்றிய அரசேவெளியிடுகின்ற அனைத்து தரவரிசையிலும், அனைத்து புள்ளிவிவரங்களிலும் நம்முடைய தமிழ்நாடு தான் முதன்மை இடத்தை மீண்டும்மீண்டும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன? நம்முடைய,திறமையான நிர்வாகம்! இத்தனை இடர்பாடுகளை நீங்கள் உருவாக்கும்போதே நாங்கள் இந்த அளவு சிறப்பாக செயல்படுகிறோம்என்றால், எங்களை வஞ்சிக்காமல் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்கவேண்டிய நிதியை கொடுத்தால், எங்கள் உரிமைகளில் தலையிடாமல்,இருந்தால், எங்களால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும்!நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் ஏற்படுத்துகின்ற தடைகளைஎல்லாம் ஒவ்வொன்றாக சட்டபூர்வமாக உடைத்தெறிவோம்.
அதுமட்டுமல்ல, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-1 மாநிலமாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்போம். இதனால் தான் தமிழ்நாடு மட்டும் எப்படி தனித்துவமாக இருக்கலாம் என்று நினைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் 2026-ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.
தமிழ்நாட்டிற்கு வந்து அதை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் –
டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலமாக மிரட்டி, ஆட்சி அமைக்கின்ற உங்களுடைய பார்முலா இங்கேதமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. நீங்கள் ஏமாற வேண்டாம். 2026-ல்திராவிட மாடல் ஆட்சி தான். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமேடெல்லிக்கு தான். இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரைமிரட்டி, கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள்பரிவாரங்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஒரு கைபார்ப்போம்.
நான் கேட்பது தமிழர்களை எப்படியெல்லாம் நீங்கள்கொச்சைப்படுத்தினீர்கள். அண்மையில் கூட ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களை நாகரீகம் இல்லாதவர்கள்என்று சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டாரே. அதற்கு முன்னால் இன்னொரு,ஒன்றிய அமைச்சர், தமிழர்கள் வெடிகுண்ட வைப்பவர்கள் என்று சொல்லிபிறகு மன்னிப்புக் கேட்டார். நீங்கள் ஒடிசாவில் பேசினீர்களே, பூரி,ஜெகந்நாத் கோயிலின் கருவூல சாவியை திருடி தமிழ்நாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று நீங்களும், பிரதமரும் ஒடிசாவிற்கு சென்றுபேசினீர்கள்! தமிழ்நாட்டைச் சார்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் இருக்கிறார் என்பதற்காக, ஒரு தமிழர் ஒடிசாவை=ஆளாலாமா? என்று கேட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை நடத்தினீர்களே!அதுபோல, இங்கே செய்ய முடியாது. இங்கே நீங்கள் தன்மானமும், தமிழினமானமும் இல்லாத கொத்தடிமைகளின் துரோகக் கூட்டணியில்சேர்ந்து தமிழ்நாட்டை ஆள நினைக்கிறீர்கள். கொஞ்சம் வரலாற்றைஎடுத்துப் பாருங்கள். சுய மரியாதையும், மானமும், வீரமும், விவேகமும்,நல்லிணக்கமும் உள்ள மண் எங்கள் தமிழ் மண்.ஆதிக்கத்தையும், ஆக்கிரமைப்பையும் எந்த காலத்திலும் அனுமதிக்காதமானமுள்ள மண் இந்த தமிழ் மண். தேர்தலுக்குள் அடுத்த ஓராண்டில் நீங்கள்,எப்படியெல்லாம் ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டுவீர்கள் என்று,எங்களுக்கு தெரியும். ஏன் நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும்.,நாங்கள்இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள்அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன் -இங்கே ஆளமுடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதிஸ்டாலின் இருக்கும்வரை உங்கள் திட்டம் பலிக்காது.தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அவர் பேசினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
செங்கோட்டையன் தலைமையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
18 Apr 2025கோபி : அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சை கண்டித்து செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
கூட்டணி குறித்த கேள்வி: ஓ.பன்னீர் செல்வம் பதில்
18 Apr 2025கோவை : கூட்டணி குறித்த கேள்விக்கு இன்று லீவு என ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
-
அமித்ஷா அல்ல எந்த ஷாவாக இருந்தாலும் இங்கே ஆள முடியாது: முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
18 Apr 2025சென்னை, நாங்கள்இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள்அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் இங்கே ஆளமுடியாது.
-
பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை
18 Apr 2025அமெரிக்கா : பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சக பயணியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
டெல்லி ஆளுகைக்கு தமிழகம் என்றைக்குமே அடிபணியாது: திருவள்ளூர் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
18 Apr 2025சென்னை, டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் உங்கள் பார்முலா தமிழகத்தில் நடக்காது.
-
சீனாவுக்கு இனியும் வரியை அதிகமாக்க விரும்பவில்லை: அதிபர் ட்ரம்ப் திடீர் முடிவு
18 Apr 2025வாஷிங்டன், சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பலி; 6 பேர் காயம்
18 Apr 2025ப்ளோரிடா : அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
-
திருவள்ளூரில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Apr 2025திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூவம் ஆற்றின் குறுக்கே 20 கோடியே 37 இலட்சம் ரூப
-
சென்னை விமான நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர விரைவில் ஏற்பாடு
18 Apr 2025ஆலந்தூர் : சென்னை விமான நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என மாநகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியா..? - மத்திய அரசு விளக்கம்
18 Apr 2025புதுடெல்லி : யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் எந்த ஒரு திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
கொலம்பியாவில் சுகாதார அவசர நிலை: மஞ்சள் காய்ச்சலுக்கு 34 பேர் பலி
18 Apr 2025பொகாடா : தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பவன் கல்யாண் மீது ரோஜா தாக்கு
18 Apr 2025திருப்பதி : பவன் கல்யாண் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஜா பாய்ச்சல்.
-
என்.ஐ.ஏ.வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
18 Apr 2025புதுடெல்லி : பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தன
-
ஜி.பி.எஸ். முறையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பா..? மத்திய அரசு விளக்கம்
18 Apr 2025புதுடில்லி, மே 1 முதல் ஜி.பி.எஸ். முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நீரஜ் சோப்ரா முதலிடம்
18 Apr 2025தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் போட்ச் இன்விடேஷனல் தடகள போட்டி நடைபெற்றது.
-
காயத்தால் குர்ஜப்னீத் சிங் விலகல்: பிரவீசை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
18 Apr 2025சென்னை : சி.எஸ்.கே.
-
நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு: குடும்பத்தினர் வேண்டுகோள்
18 Apr 2025சென்னை : நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
விரைவில் தமிழ் வழி மருத்துவக் கல்வி: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
18 Apr 2025சென்னை : தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
18 Apr 2025சென்னை : சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
18 Apr 2025சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் : ஹமாஸ் தலைவர் திடீர் அறிவிப்பு
18 Apr 2025கெய்ரோ : பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என்று ஹமாஸ் தலைவர் அறிவித்துள்ளார்.
-
ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது: வீரேந்திர சேவாக்
18 Apr 2025மும்பை : ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார்.
-
வரத்து குறைவால் எலுமிச்சை கிலோ ரூ.170-க்கு விற்பனை
18 Apr 2025சென்னை : கோடை வெயில் அதிகரிப்பு காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் எலுமிச்சை கிலோ ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுகிறது அமெரிக்கா?
18 Apr 2025பாரிஸ் : ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில், இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால
-
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்: 38 பேர் பலி
18 Apr 2025சனா : இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வரும் நிலையில், ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 38 பேர் பலியானார்கள்.