முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத் தளபதி புகார்: ராஜ்யசபையில் கடும் அமளி

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 27 - ராணுவ தளபதி வி.கே.சிங் கூறியுள்ள ஒரு புகார் தொடர்பாக ராஜ்யசபையில் நேற்று எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  ராஜ்யசபை நேற்று காலை கூடியதும் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா எழுந்து ராணுவத் தளபதி வி.கே.சிங் கூறியுள்ள ஒரு புகார் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ராணுவ வாகனங்களை கொள்முதல் செய்வதற்கு தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் கொடுக்க சிலர் முன்வந்ததாக வி.கே.சிங் கூறியுள்ளார்.  இது தொலைக்காட்சிகளில் பரபரப்பான செய்தியாக வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். அப்போது ராஜ்யசபா துணைத்தலைவர் ரகுமான்கான், தொலைக்காட்சி செய்திகளுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றார். 

இந்த பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்தனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த பல்பீர் புஞ், சந்தன்மித்ரா, பிஜு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த பியாரிமோகன் மொஹபத்ரா, அ.தி.மு.க.வின் டாக்டர் மைத்ரேயன் ஆகியோரும் இப்பிரச்சனைக்காக குரல் கொடுத்தனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு சபை மீண்டும் கூடியபோதும் இதே பிரச்சனையை வலியுறுத்தி பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சபையில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபையை நடத்த முடியாத சூழ்நிலையில் சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்