எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.- 4 - மு.க.அழகிரியே ஒரு தாதா. அவருக்கு எதற்கு பாதுகாப்பு. மு.க. அழகிரிக்கு அச்சுறுத்தலே இல்லை. மு.க. அழகிரியால்தான் மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று மதுரை பிரசாரத்தில் ஜெயலலிதா கேள்வி விடுத்தார். தமிழகத்தில் வரும் 13-ம் தேதி நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்றுக்காலை விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அம்பாசமுத்திரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு நேற்றுமாலை 4.10 மணி அளவில் மதுரை வந்தார். மதுரை நத்தம் ரோட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஜெயலலிதா வந்திருங்கினார். பின்னர் அங்கிருந்து பிரசார வேனில் புறப்பட்டு நத்தம் ரோடு, அவுட்போஸ்ட், தல்லாகுளம், கோரிப்பாளையம், செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு, அருள்தாஸ்புரம், பாத்திமா கல்லூரி சந்திப்பு, தீக்கதிர் அலுவலகம்,குரு தியேட்டர் வழியாக காளவாசல் சந்திப்பை சரியாக 4.40 மணி அளவில் வந்தடைந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடையே அ.தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சாதாரண மனிதர்கள் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தால் அரசும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம்.
தனது மகன் மு.க. அழகிரிக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அறவே விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு கருணாநிதி அங்கலாய்த்துக்கொள்கிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறும் மு.க. அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு. அழகிரிக்கு யாராலும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. அழகிரியால்தான் மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. அழகிரியே ஒரு தாதா. அவருக்கு எதற்கு பாதுகாப்பு. தா.கியை கொலை செய்தது யார். பத்திரிகை அலுவலகத்தை எரித்து 3 பேர் எரித்து கொல்லப்பட்டதற்கு யார் காரணம். அப்படிப்பட்ட அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு. தந்தையின் பிறந்த நாளை சொந்த பணத்தை செலவு செய்து கொண்டாடாமல் தனியார் கம்பெனிக்கு சொந்தமான ஹார்லிக்ஸ் பாட்டீல்களை திருடி கொண்டாடிய அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அலுவலர்களை மிரட்டி வரும் தாதாவிற்கு எதற்கு பாதுகாப்பு. இட்லி கடை முதல் , நகைக்கடை உரிமையாளர்கள் வரை கப்பம் கட்ட வைத்துக்கொண்டியிருக்கும் அழகிரிக்கு எதற்கு பாதுகாப்பு.
தன் பயணம் ஒரு கொள்கை அடிப்படையிலான பயணம் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதிக்கு என்ன கொள்கை இருக்கிறது. அவர் எந்த கொள்கையைப் பற்றி பேசுகிறார். தி.மு.க.வின் கொள்கைகளை பரப்பி வந்த தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ராசா, தற்போது டெல்லி திஹார் சிறையில் தி.மு.க. கொள்கைகளை பரப்பிக் கொண்டியிருக்கிறார். இதுவே அவர்களின் கொள்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும். காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். மதுரை மாநகரில் வலம் வரும் ரவுடிகள் ஒழிக்கப்பட்டு மதுரை ஒரு ஆன்மீக நகரமாக,சுதந்திரமான நகரமாக மாற்றப்படும். தா.கி. கொலை வழக்கு,பத்திரிகை அலுவலகம் எரிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியான வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மதுரை நகரத்தில் சாலைகள், சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். மதுரை நகரத்தைச் சுற்றி தொழிற்சாலைகள் அமைக்கப்படும். குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு செய்து தரப்படும்.
ஒரு ரவுடிக்கும்பல் தமிழ்நாட்டு மக்களை ஆள்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ, மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எ.கே.போஸ் ஆகியோர்களுக்கு எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச்சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றபெறச் செய்ய வேண்டுகிறேன். மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அண்ணாதுரைக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்திலும் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.சுந்தரராசனுக்கு முரசு சின்னத்திலும் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அ.இ.பார்வர்டு பிளாக் வேட்பாளர் பி.வி.கதிரவனுக்கு சிங்கம் சின்னத்திலும் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்3 days 6 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.