முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லிஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முருகேசன் பதவிஏற்றார்

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 27- டெல்லி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நீதிபதி தர்மர் முருகேசன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். டெல்லி ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே. சிக்ரி பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து இப்பதவிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த தர்மர் முருகேசன் புதிய தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். 62 வயதான நீதிபதி முருகேசன் நேற்று டெல்லி ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுனர் தேஜேந்திர கன்னா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். டெல்லி கவர்னர் மாளிகையில் நடந்த இந்த பதவி ஏற்பு விழாவில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், மற்றும் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் கலந்து கொண்டனர். நீதிபதி முருகேசன் பதவி ஏற்றதை முன்னிட்டு டெல்லி ஐகோர்ட்டின் வழக்கமான பணிகள் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு தொடங்கின. 1951 ல் பிறந்த முருகேசன் 1975 ல் வக்கீல் தொழிலை துவக்கினார். பிறகு இவர் கடந்த 2000 ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு இப்போது அவர் பதவி உயர்வு பெற்று டெல்லி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்