முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.புலிகளை அழிக்க காரணமாக இருந்தவர் கருணாநிதி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.22 - இலங்கையில் விடுதலைப்புலிகளை அழிக்க காரணமாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று டாக்டர் ராமதாஸ் மதுரையில் தெரிவித்தார்.   பாட்டாளி மக்கள்கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இலங்கையில் நடந்த இன அழிப்பு. உலக வரலாற்றில் கடும் கண்டனத்துக்குரியதாகும். கடந்த 2009ம் ஆண்டு திமுக நினைத்து இருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். தமிழர்களின் பாதுகாவலராகவும், சிங்களர்களின் கண்களின் விரலை விட்டு ஆட்டி வந்த விடுதலைபுலிகளை அழிக்க காரணமாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதிதான்.

   இலங்கையில் தமிழ் இனம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும்  திருமாளவன் அடங்கிய குழுவினர் இலங்கை சென்று ராஜபக்சேவிடம் விருந்து சாப்பிட்டு விட்டு வந்தனர். ஆனால் தற்போது இலங்கை தமிழர் மீது பாசம் வந்து விட்டது போல் நடிக்கிறார் என்றார்.

  பேட்டியின் போது, தேசியபார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.டி.,அரசகுமார் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்