எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருத்தணி, பிப்.23 - திருத்தணி ஒன்றியம் சத்துருஞ்செயபுரம் ஊராட்சியிலுள்ள சீனிவாசபுரம், முஸ்லீம் நகர், அருந்ததி காலனி மற்றும் மேதினிபுரம் ஆகிய கிராங்களில் காலம் காலமாக வசித்து வருபவர்களின் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை மோசடியாக விற்பனை செய்ததை ரத்து செய்திட வலியுறுத்தியும், 5 ஆயிரம் மக்களை காலி செய்து விட்டு, அந்த நிலத்தை கோபாலபுரத்தை சேர்ந்த பெண்மணி மூலம் வெளி மாநில நிறுவனங்களுக்கு விற்கும் முயற்சியை ஜெயலலிதா தடுத்து நிறுத்துவார். விரைவில் கருணாநிதியின் அக்கிரமம் முடிவுக்கு வரப் போகிறது என்று அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுகுறித்த விபரம் வருமாறு:-
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆணைக்கிணங்க திருத்தணி நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளையும், திருத்தணி நகரத்திற்கு உள்ளே வருவதற்கு கட்டப்படும் பாலத்தின் பணிகளை விரைந்து முடித்திடவும் வீட்டுவரி உயர்வையும், பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விடப்படுவதையும், திருத்தணி கமலா தியேட்டர் அருகில் நேற்று (22.2.2011) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மேற்கு எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ.அரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கண்டன உரையாற்றிய மதுசூதனன் பேசியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வருங்கால முதல்வர் ஜெயலலிதா ஆணைங்கிணங்க இங்கு மிகபெரிய பிரம்மாண்டமான அளவில் மக்கள் வெள்ளத்தில் இங்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. திருத்தணி ஒன்றியத்திலுள்ள சீனிவாசபுரம், முஸ்லீம் நகர், அருந்ததி காலனி மக்களை அப்புறப்படுத்த மைனாரிட்டி தி.மு.க. அரசு முயற்சி எடுக்கிறது. ஆனால் ஜெயலலிதா இன்றைக்கும் மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்கள் வாழ்வதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமிய மக்களை ஏமாற்றுவதே கருணாநிதியின் வேலை. சென்னை கோபாலபுரம் 3-வது குறுக்கு தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி இந்த மூன்று கிராமங்களை கையகப்படுத்த நினைக்கிறார். ரூ.1 கோடியே எழுபத்து ஆறு லட்சத்திற்கு அக்ரிமெண்ட் போட்டிருக்கிறார். இதை அடி மாட்டு விலைக்கு வாங்கி வெளிமாநில நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நினைக்கிறார். காவல் துறைக்கு நான் சொல்லிக்கொள்வது ஏழை வயிற்றில் அடிக்காதீர்கள் .விரைவில் கோபாலபுரத்துக்காரரின் அக்கிரமம் முடிவுக்கு வரப் போகிறது. பொதுமக்களின் கண்ணீர் கருணாநிதி தண்ணீராக நினைக்கிறார். தர்மத்திற்கும், நீதிக்கும் வழி பிறக்கும் 1200 குடும்பம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழுகிற இடத்தை அபகரிக்க பார்க்கிறார். இது தி.மு.க.வுக்கு ஒன்றும் புதியது கிடையாது. என்.கே.கே.பி.ராஜா, வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் பல தி.மு.கவினர் கிராமங்களை காலி செய்து நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். நமிதா, நக்மா, குஷ்பு ராஜியத்தை பார்க்க கருணாநிதி நினைக்கிறார். இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கருணாநிதி நாடகம் நடத்துக்கிறார். அதில் ஒன்று கனிமொழி கைது. மீனவர்ளுக்கு பாடுபடும் ஒரே தலைவி ஜெயலலிதா இந்த 3 கிராமங்களை பற்றி கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் அ.தி.மு.க. சார்பில் பேச ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இதை பேச அனுமதி மறுக்கப்பட்டது. இன்னும் 3 மாதத்தில் மின்சார பற்றாக்குறை இருக்காது. விரைவில் ஜெயலலிதா முதல்வராக வரபோகிறார். இனி மக்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவ்வாறு மதுசூதனன் பேசினார்.
இதில் அரசு முன்னாள் கொறடா நரசிம்மன், திருத்தணி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இ.என்.கண்டிகை எ.ரவி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் டி.பார்த்தீபன், தொகுதி செயலாளர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் லதா நீலகண்டன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் வேலஞ்சேரி எஸ்.பழனி நாகபூடி கோ.குமார், சேர்மேன் பி.ஜோதி, துணைத்தலைவர் எஸ்.நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் டி.எம்.சீனிவாசன், பொருளாளர் பத்மாபுரம் சுரேஷ், மணபாக்கம் மு.காமராஜ், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.பி.தாயுமாணவன், நகர இளைஞர் அணி செயலாளர் கேபிள் எம்.சுரேஷ், மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் என்.ஏ.குப்பன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜி.பெருமாள், உத்திரமேரூர் தங்கபஞ்சாட்சரம், கே.பரத் கிருஷ்ணா, நகர பாசறை செயலாளர் சி.ஜி.நந்தா, பள்ளிப்பட்டு ஒன்றியம் ஏ.ஆர்.கந்தப்பன், ஏ.ஜி.கருணாகரன், ஆர்.தேவன், டி.ஏ.சுரேஷ், ஓ.கோபி, எ.அமாவாசை, தட்சணாமூர்த்தி மற்றும் ஏ.எஸ்.பாலஜி, தெக்களூர் என்.சேட்டு, சம்பத் நாடார், கவுன்சிலர்கள் சி.முனுசாமி நிர்மல்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். முடிவில் நகர செயலாளர் டி.செளந்தர்ராஜன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்: கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு
27 Apr 2024சென்னை, கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.