முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார நெருக்கடி: பிரதமர் இன்று விளக்கம்

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆக. 30 -பொருளாதார நெருக்கடியை நாடு இப்போது சந்தித்துள்ளதை தாம் மறுக்கவில்லை என்றும் இது குறித்து நாளை (இன்று)  நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறேன் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று பொருளாதார நிலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. அருண் ஜெட்லி கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரிவடைவது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என்றும் பொருளாதார நிலை குறித்து நாளை(இன்று) சபையில் விளக்கம் அளிப்பதாகவும் பிரதமர் கூறினார். மேலும், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதை தாம் மறுக்கவில்லை. உள்நாட்டு விவகாரங்களும், சர்வதேச சூழ்நிலைகளும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதற்குக் காரணமாக உள்ளன என்றும் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்