முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகரெட் தொழிற் சாலைகளில் சுங்க அதிகாரிகள் சோதனை

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

வாரணாசி, பிப்.23 - உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ருத்ரா எண்டர்பிரைசஸ் என்ற சிகரெட் கம்பெனிக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் மத்திய கலால் மற்றும் சுங்க இலாக அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். வாரணாசியில் உள்ள  ருத்ரா எண்டர்பிரைசஸ் கம்பெனியில் நடைபெற்ற இந்த சோதனையின்போது பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கலால் மற்றும் சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகவும், விற்பனை விலையை விட  மிகக்குறைவான விலையில் இந்த சிகரெட்டுகளை விற்றதாகவும்  கிடைத்த தகவலை அடுத்தே அதிகாரிகள் இந்த தொழிற்சாலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

அதிகாரிகள் இரு குழுக்களாக சென்று நாடுமுழுவதும் 10 இடங்களில் இதுபோன்ற சோதனைகளை நடத்தினார்கள். கான்பூர், டெல்லி, மதுரா உள்ளிட்ட பல நகரங்களில் இந்த சோதனை நடைபெற்றது. வாரணாசியிலும் இந்த சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டனர். மேகாலயா கவர்னர் மாளிகை முன்னாள் செயலாளர் ஐ.வி.பாண்டேவுக்கு சொந்தமானதுதான் இந்த ருத்ரா எண்டர்பிரைசஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிகரெட் கம்பெனியின் சிகரெட்டுகள் தென்னிந்தியாவில்தான் அதிக அளவில் விற்பனை ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்